உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேன்ஸ் விழாவில் ஆலியாவுக்கு நேர்ந்த சங்கடம் ; ஆதரவாக குரல் கொடுத்த சோனு சூட்

கேன்ஸ் விழாவில் ஆலியாவுக்கு நேர்ந்த சங்கடம் ; ஆதரவாக குரல் கொடுத்த சோனு சூட்


பாலிவுட் நடிகை ஆலியா பட், ராஜமவுலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடமும் பிரபலமானவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். தற்போதும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீப நாட்களாக நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஆலியா பட் லோரியல் என்கிற நிறுவனத்தின் தூதராக கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில் சர்வதேச புகைப்பட கலைஞர்கள் ஆலியா பட்டை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது போல தெரிந்ததால் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளானார் ஆலியா பட்.

சோசியல் மீடியா பக்கத்தில் கூட ரசிகர் ஒருவர், “பாவம் உங்களை அங்கு யாருமே கவனிக்கவில்லை” என்று கிண்டலாக குறிப்பிட்டார். ஆனாலும் கூட ஆலியா பட், “ஏன் பாவப்பட வேண்டும்.. நீங்கள் என்னை கவனித்து விட்டீர்களே..” என்று சாதுரியமாக பதில் அளித்தார். இந்த நிலையில் தான் இப்படி நெட்டிசன்கள் பலரும் ஆலியா பட்டை கிண்டல் செய்வதை பார்த்து பாலிவுட் நடிகர் சோனு சூட் அவருக்கு ஆதரவாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறும்போது, “நம்மவர் ஒருவர் சர்வதேச மேடையில் ஏறும்போது அது பெருமைப்பட வேண்டிய தருணமே தவிர, குறைகளை தேட வேண்டிய நேரம் அல்ல.. ஒவ்வொரு சாதனைக்கும் கேமராக்களின் வெளிச்சமோ அல்லது அந்நியர்களின் அங்கீகாரமோ அவசியமில்லை.. தொடர்ந்து ஜொலியுங்கள் நண்பரே” என்று பதிவிட்டுள்ளார் சோனு சூட். ஆலியா பட் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும் கூட அது அவருக்கான ஆதரவுக் குரல் தான் என்பதை ரசிகர்கள் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !