sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 18, 2026 ,பங்குனி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

11

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1092

TNPSC releases hall tickets for Group II, IIA main exam

Kalvimalar News

11-Feb-2026

மேஷம்: அசுவினி: உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் பூர்வ புண்ணியாதிபதி மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட இருந்த தடைகள் விலகும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் என்ற வார்த்தைக்கேற்ப உங்கள் முயற்சி யாவும் லாபம் தரும். வெளியில் இருந்து வரவேண்டிய பணம் வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சிலரது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். உடலில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வம்பு வழக்குகள் என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகள் தடையின்றி நடந்தேறும். குடும்பத்தில் சுபிட்ச நிலை இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பிப். 22 முதல் ராசியாதிபதியும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்  விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில் வளர்ச்சி அடையும். செய்துவரும் தொழில் எதிர்பார்த்த ஆதாயத்தை வழங்கும். சேமிப்பு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும்.சந்திராஷ்டமம்: மார்ச். 9, 10அதிர்ஷ்ட நாள்: பிப். 16, 18, 25, 27. மார்ச். 7பரிகாரம் கற்பக விநாயகரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.பரணிநினைத்ததை நடத்தி முடிக்கும் வரை அதற்காக உழைக்கும் உங்களுக்கு மாசி மாதம் மகிழ்ச்சியான மாதம். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் கூடும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். கூட்டுத்தொழில் வளர்ச்சி அடையும். உறவினர் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்திடக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். ராசிநாதன் பிப். 22 முதல் சாதகமாக சஞ்சரிப்பதால் வரவு, செலவில் இருந்த நெருக்கடி விலகும். தொடர்ந்து ஏதாகிலும் ஒரு வகையில் செலவுகளையே பார்த்து வந்த உங்களுக்கு  லாபத்தை பார்த்திடக்கூடிய நிலை உண்டாகும். முடங்கிக்கிடந்த தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும் கலைஞர்களுக்கு மாதத்தின் முதல் வாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சிகள் வெற்றியாகும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்து வருபவர்களுக்கு அதற்குரிய அனுமதி கிடைக்கும். வேலையில் நிம்மதி இல்லை என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்து வாகனம் என்று வாங்கும் நிலை உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகள் பற்றிய கவலை விலகும். அவர்களுடைய எதிர்காலத்திற்குரிய வழிகளை உருவாக்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். மார்ச் 6 முதல் தொழில்காரகன் சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. புதிய முதலீடுகளில் நிதானம் வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்தவொரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். உடல்நலனில் அக்கறை தேவை. பிப். 20 முதல் புதன் வக்கிரமடைவதால் மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கமிஷன் ஏஜன்சி, ஷேர் மார்க்கெட் தொழிலில் ஈடுபட்டிருப்போர் சூழல் அறிந்து செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: மார்ச் 10, 11அதிர்ஷ்ட நாள்: பிப்.15, 18, 24, 27. மார்ச். 6, 9பரிகாரம் தில்லை காளியை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் உண்டாகும்.கார்த்திகை 1 ம் பாதம்முன்னேற்றப் பாதையில் நடைபோட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் யோகமான மாதம். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் இருளில் இருந்த உங்களை வெளிச்சத்திற்கு அழைத்து வருவார். சங்கடம் சச்சரவு போராட்டம் என்றிருந்த நிலை மாறும். கையில் பணம் புழங்கும். செல்வாக்கு கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கூடும். சிலருக்கு புதிய பொறுப்பும் பதவியும் கிடைக்கும். மார்ச். 6 வரை லாப சனி உங்களைத் தலைநிமிர்ந்து வாழ வைப்பார். அதன்பி றகு விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் யோகக்காரகன் ராகு தொடர்ந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவிற்குத் தேவையான வருமானம் தொடர்ந்து வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு அரசின் அனுமதி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் லாபம் தரும். அந்நியரால் ஆதாயம் அதிகரிக்கும். பிப். 22 முதல் ராசி நாதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் சொத்து சேரும். காவல்துறை, ராணுவம், மீட்புப்பணி துறையினருக்கு மரியாதை அதிகரிக்கும். மருத்துவத் துறையினருக்கு மதிப்பு உண்டாகும். பிப். 20 முதல் புதன் வக்கிரம் அடைவதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்கு யோசிப்பது நல்லது.  பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உறவினர் உங்களுக்கு எதிராக மாற வாய்ப்பிருப்பதால் அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. என்றாலும் லாப ஸ்தான பலம் அடைவதால் செல்வம் செழிப்படையும். புதிய பொருட்கள் சேரும் கையிருப்பு கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சந்திராஷ்டமம்: மார்ச் 11அதிர்ஷ்ட நாள்: பிப்.18, 19, 27, 28. மார்ச் 1, 9, 10பரிகாரம் அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளில் உறுதியாக இருந்து வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக உங்களுக்கிருந்த நெருக்கடி, போராட்டம், பிரச்னைகள் எல்லாம் உங்களை விட்டு விலகும்.  தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். ஜீவன ஸ்தானத்தில் உங்கள் தன, குடும்பாதியும், பூர்வ புண்ணியாதிபதியுமான புதனும், சுகாதிபதி சூரியனும் இணைந்து புத ஆதித்ய யோகத்தை உண்டாக்குவதால் உங்கள் செல்வாக்கு உயரும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு பலமுறை முயற்சி செய்தும் கிடைக்காத இடமாற்றம் இப்போது கிடைக்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பும், பதவியும் கிடைக்கும். நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டுத் தொடர்புகள் ஆதாயம் தரும் என்றாலும் உழைப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நினைத்ததை சாதித்து முடித்திடும் நிலை உண்டாகும். மாணவர்கள் கேளிக்கைக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: மார்ச் 11அதிர்ஷ்ட நாள்: பிப்.15, 19, 24, 28. மார்ச். 1, 6, 10பரிகாரம் சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும்.ரோகிணிபிறக்கும் மாசி மாதம் யோகமான மாதமாகும். வேலையில் பிரச்னை, வம்பு, வழக்கு என அவதிப்பட்டு வந்த நிலை மாறும். குற்றம் சுமத்தி பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சிலர் தகுதியான இடத்திற்கு மாறுவீர்கள்.  வேலைக்காக முயற்சிப்பவருக்கு நல்ல வேலை கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு தேவையான பணமும், அரசின் அனுமதியும் கிடைக்கும். வரவு செலவில் இருந்த நெருக்கடி விலகும். மாதத்தின் முதல் வாரத்தில் கையில் பணம் புரளும். கேட்ட இடத்திலிருந்து பணம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். மார்ச் 6 முதல் உங்கள் பாக்ய மற்றும் ஜீவனாதிபதியான சனி பகவான் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதால் உங்கள் வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். முடங்கிக் கிடந்த தொழில்களும் முன்னேற்றம் அடையும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். உங்கள் விரயாதிபதி செவ்வாயின் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் விவசாயிகள், மருத்துவர்கள், சீருடை பணியாளர்கள் கவனமாக செயல்படுவது நன்மை தரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும்.சந்திராஷ்டமம்: பிப். 13, 14. மார்ச். 12, 13அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 20, 24, 29. மார்ச். 2, 6, 11பரிகாரம் வெங்கடாஜலபதியை வழிபட நன்மை உண்டாகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து எடுத்த வேலைகளில் வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் யோகமான மாதமாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட பிரச்னை, தடைகள் விலகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய வீட்டில் பால் காய்ச்சும் நிலையும் சிலருக்கு உண்டாகும். செய்து வரும் தொழிலை விரிவு செய்வதற்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுத்த முயற்சி வெற்றியாகும். உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வேலையில் இருந்த பயம் போகும். உங்கள் திறமைக்குரிய மதிப்பு ஏற்படும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தொழிலை மாற்றம் செய்வதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பொன், பொருள் சேரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.சந்திராஷ்டமம்: பிப். 14. மார்ச். 13, 14அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 18, 24, 27. மார்ச். 6, 9பரிகாரம் திருச்செந்துார் முருகனை வழிபட விருப்பம் நிறைவேறும்.

மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்மன உறுதி கொண்ட உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் நன்மையான மாதமாகும். அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், பாக்கிய ஸ்தானத்தில் புதன் என்ற சஞ்சார நிலைகள் எதிர்மறை பலன்களை ஏற்படுத்தும். மார்ச் 6 வரை சனிபகவான் உங்கள் வேலைகளில் வெற்றியை உண்டாக்குவார். தைரியம், தன்னம்பிக்கையை அதிகரிப்பார். பெரியோரின் துணையும், தெய்வ அருளும் கிடைக்கும். கடந்த மாதத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், நெருக்கடிகள் நீங்கும். எடுத்த வேலைகளை முடித்திடக் கூடிய அளவிற்கு சூழ்நிலை சாதகமாகும். உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் மார்ச் 3 வரை அபரிமிதமான வருமானத்தை வழங்குவார். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பொன், பொருள் சேரும்.  குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது மிக கவனமாக இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும், கையில் எடுத்துச் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. வயதானவர்களுக்கு ஆரோக்கியம் சீராகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதும் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதும் அவசியம். சந்திராஷ்டமம்: பிப். 15. மார்ச் 14அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 18, 23, 27. மார்ச் 5, 9பரிகாரம் விஷ்ணு துர்கையை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.திருவாதிரைநினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் யோகமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் போட்டிப் போட்டுக்கொண்டு உங்களுக்கு நன்மைகளை வழங்குவார்கள். வரவேண்டிய பணம் வரும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய முயற்சிகள் வெற்றி அளிக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். சகோதரர்கள் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும் என்றாலும், ஒவ்வொரு வேலையிலும் உங்களுடைய மேற்பார்வை இருப்பது நன்மையை உண்டாக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஆலோசித்து புதிய முயற்சிகளை மேற்கொள்வது மேலும் நன்மையாகும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு அரசு ரீதியாக ஏற்பட்ட பிரச்சனைகள் சங்கடங்கள் விலகும். மனதில் நிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பிப். 20 முதல் புதன் வக்கிரம் அடைவதால் மாணவர்கள் படிப்பில்  கூடுதல் அக்கறை எடுப்பது அவசியம்.சந்திராஷ்டமம்: பிப். 15, 16.அதிர்ஷ்ட நாள்: பிப். 13, 14, 22, 23, மார்ச். 4, 5, 13, 14.பரிகாரம் திருவாலங்காடு காளியை வழிபட சங்கடங்கள் விலகி நன்மை உண்டாகும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்சுயமாக சிந்தித்து செயல்படும் உங்களுக்கு, மாசி நன்மையான மாதம். ராசிக்குள் குரு வக்கிரமாக சஞ்சரித்தாலும் பாக்ய ஸ்தானத்தில் சகாய ஸ்தானாதிபதி சூரியனும், யோகக்காரகன் ராகுவும், மார்ச் 6 வரை சனி பகவானும் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்காலத்தை மனதில் நினைத்து செயல்படுவீர்கள். குடும்பம், தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். புதிய முயற்சிகள் வெற்றியாகும். மார்ச் 3 வரை சுக்கிரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும். கையில் பணம் புரளும். பிறருக்கு உதவக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும்.  தொழில் முன்னேற்றம் அடையும். முடங்கிக் கிடந்த தொழில்களும் லாபம் தரும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கணவன், மனைவிக்குள் இருந்த இடைவெளி விலகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விவசாயிகள் எந்தவொரு வேலையாக இருந்தாலும் நீங்களே செய்வது நன்மையை ஏற்படுத்தும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு வேலையில் நிம்மதி இருக்கும். முதலாளியின் ஆதரவு கிடைக்கும்.சந்திராஷ்டமம்: பிப். 16, 17அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 21, 23. மார்ச் 3, 5, 12, 14பரிகாரம் வியாழன் அன்று குருபகவானை வழிபட  நன்மை உண்டாகும். 

புனர்பூசம் 4 ம் பாதம்பிறருக்கு வழிகாட்டியாக வாழும் உங்களுக்கு, மாசி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ராசிக்குள் குரு வக்கிரமாக சஞ்சரிப்பதால் அலைச்சலும், செலவும் அதிகரிக்கும். வீண் முயற்சிகளை மேற்கொள்ள வைத்து சங்கடத்திற்கு அளிக்கும். அஷ்டம ஸ்தானத்தில் தன குடும்பாதிபதி சூரியன், யோகக்காரகன் ராகு மறைவதால் குடும்பத்தில் நெருக்கடி உருவாகும். பண விவகாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். வியாபாரத்தில் மறைமுகத் தொல்லை அதிகரிக்கும். உடன் இருப்பவர்களும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுவர். உடல் நிலையில்  சங்கடம் உண்டாகும். வழக்கு விவகாரங்களை இந்த நேரத்தில் தள்ளிப்போடுவது நல்லது. பிப்.22 முதல் செவ்வாயும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நெருக்கடி அதிகரிக்கும். புதிய முயற்சி இந்த மாதத்தில் வேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நன்மை தரும். பணியாளர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச் செல்வது அவசியம். வியாபாரிகள் புதிய முதலீடு செய்யும் முன்னதாக மார்க்கெட் நிலவரத்தை அறிந்து செயல்படுங்கள்.  தம்பதியர் விட்டுக்கொடுத்து செல்வதால் குடும்பத்தில் நெருக்கடி குறையும். நிம்மதி இருக்கும். விவசாயிகளுக்கு பணியில் கூடுதல் கவனம் தேவை. புதிய இடம், வீடு வாங்குபவர்கள் வில்லங்கம் பார்த்து வாங்குவது அவசியம். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவதுடன் ஆசிரியர்களின்  ஆலோனையை ஏற்பது நல்லது. சந்திராஷ்டமம்: பிப். 17அதிர்ஷ்ட நாள்: பிப். 20, 21, 29, 30. மார்ச். 2, 3, 11, 12பரிகாரம் பைரவரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.பூசம்நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு மாசி மாதம் நன்மையான மாதம். மார்ச் 6 முதல் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து சனி பகவான்  பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி, பிரச்னை, போராட்டம் எல்லாம் விலக ஆரம்பிக்கும். பணவரவு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வழக்கு, விவகாரம் சாதகமாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். உங்களை அலட்சியம் செய்தவர்களும் ஆச்சரியத்துடன் பார்த்திடும் நிலை உண்டாகும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். இரண்டரை ஆண்டு காலமாக அனுபவித்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும்.  சிலருக்கு புதிய சொத்து சேரும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும் என்றாலும் அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், ராகு, பிப். 22 முதல் செவ்வாய் சஞ்சரிப்பதால் சட்டத்திற்கு புறம்பான வேலைகளால் சங்கடத்தை சந்திக்க நேரிடலாம் கவனம்.  நேர்மையும் நிதானமும் அவசியம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சந்திராஷ்டமம்: பிப். 17, 18அதிர்ஷ்ட நாள்: பிப். 20, 26, 29. மார்ச். 2, 8, 11பரிகாரம் நவகிரகத்திற்கு நல்லெண்ணெய் தீபமேற்ற நன்மை உண்டாகும்.ஆயில்யம்திட்டமிட்டு செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். பிப். 20 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் பணவரவினை அதிகரிப்பார். கிடைக்காது என நினைத்த  பணமும் உங்களைத் தேடி வரும். உங்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கடன் தொல்லை விலகும்.  நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும். மாதம் முழுவதும் உங்கள் லாபாதிபதி சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் மனதில் தெளிவும், முகத்தில் பொலிவும் இருக்கும். ஆடை, ஆபரணம், வாகனம் சேரும். வசதி வாய்ப்புகள் கூடும். பிறருக்கு உதவி செய்யக் கூடிய அளவிற்கு உங்கள் நிலை சிறப்பாக மாறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள், வேலையில் இருந்த பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், ராகு பிப். 21 முதல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வேகமாக செயல்படாமல் விவேகமாக செயல்படுவது நல்லது.  வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருப்பது அவசியம். பணியாளர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.  மாணவர்களுக்கு  படிப்பில் கூடுதல் கவனம் தேவை. சந்திராஷ்டமம்: பிப். 18, 19அதிர்ஷ்ட நாள்: பிப்.14, 20, 23, 29. மார்ச். 2, 5, 11பரிகாரம் ஆண்டாள் அழகரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

மகம்நினைத்ததை சாதிப்பதில் வல்லமை கொண்ட உங்களுக்கு, மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது வாழ்க்கைக்குரிய பாடங்களையும், படிப்பினைகளையும் நடத்துவார். யாரை நம்புவது? யாரை நம்பாமல் இருப்பது என்ற கேள்வியை எழுப்பி அதற்குரிய பதிலையும் வழங்குவார். புதிய நட்புகளால் குடும்பத்திற்குள் சங்கடங்களை ஏற்படுத்துவார். கடந்த மாதம் வரை நிம்மதியாக சென்று கொண்டிருந்த வேலைகளில் பிரச்னைகளை உண்டாக்கி உங்களை அலைக்கழிப்பார். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் ஆசை அதிகரிக்கும். வீண் செலவு ஏற்படும். நவீன சாதனங்களை வாங்கும் எண்ணம் உண்டாகும். நட்புகளுக்கிடையே விரிசல் தோன்றும். மார்ச் 6 முதல் சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்பு என்றிருந்த நிலைமாறி நேரடியாக உங்களை எதிர்க்க ஆரம்பிப்பார்கள். உடல்நிலையிலும் பாதிப்புகள் தோன்றும். அலுவலகத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் இடைவெளி ஏற்படும். குடும்பத்திற்குள்ளும் எதிர்பாராத குழப்பம் ஏற்படும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் பேதலிக்கும். இடமாற்றம், வீடு மாற்றம் செய்ய வேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்படும். மார்ச் 3 வரை சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் சிரமங்கள் ஏற்படும். ஆடம்பர வழிகளில் சென்று சங்கடத்திற்கு ஆளாவீர்கள். சிலர் சட்ட சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் இந்த மாதம் அனைத்திலும் நிதானம், கவனம், எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சந்திராஷ்டமம்: பிப். 19.20அதிர்ஷ்ட நாள்: பிப். 16, 25, 28. மார்ச். 1, 7, 10பரிகாரம்சொர்ண காளீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.பூரம் தன்மானத்துடன் வாழ விரும்பும் உங்களுக்கு, மாசி மாதம் யோசித்து செயல்பட வேண்டிய மாதம். உங்கள் ஜீவனாதிபதி சுக்கிரன் மார்ச் 3 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், ராசிநாதன் சூரியனும் மாதம் முழுவதும் சப்தம ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பார்ப்பு இழுபறியாகும். சிலருக்கு இடம்விட்டு இடம் மாறும் நிலை ஏற்படும். வேலை காரணமாக ஊரைவிட்டு வேறு ஊரில் குடியேறும் நிலை  சிலருக்கு ஏற்படும்.  தொழிலை மாற்றம் செய்யும் முயற்சியை மேற்கொள்வீர்கள். புதிய முயற்சியில் கவனம் கூடுதலாக இருக்கும். மார்ச் 6 ல் நடக்கும் சனிப்பெயர்ச்சி உங்கள் நிலையில் எதிர்பாராத மாற்றத்தை ஏற்படுத்தும். எதிரி தொல்லை அதிகரிக்கும். உடன் இருந்தவர்களும் உங்களுக்கு எதிராக மாறும் நிலை ஏற்படும். பிப். 21 வரை செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதால் சொத்து வாங்குவீர்கள். வம்பு வழக்குகளில் இருந்து விடுபட முடியும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அதன் பிறகு செவ்வாயும் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சூரியன், ராகு, செவ்வாய் என உங்களை சங்கடத்திற்கு ஆளாக்குவர். நட்புகள் வழியே நெருக்கடி தோன்றும். கணவன் மனைவிக்கிடையே இடைவெளி ஏற்படும். புதிய நபர்களால் குடும்பத்திற்குள் பிரச்னை உருவாகும். பல கிரகங்கள் எதிர்மறையாக இருப்பதால் எதிலும் நிதானம் அவசியம். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் யோசித்து செயல்படுங்கள்.  பணியாளர்கள் அதிகாரிகளின் ஆலோசனையை ஏற்பது சங்கடத்தில் இருந்து விடுவிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. விவசாயிகள் மாதத்தின் பிற்பகுதியில் கவனமாக செயல்படவும். தம்பதியர் விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும்.சந்திராஷ்டமம்: பிப். 20, 21அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 19, 24, 28. மார்ச். 1, 6, 10பரிகாரம் மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரம் 1 ம் பாதம்குறிக்கோளுடன் செயல்படும் உங்களுக்கு திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம் மாசி. உங்கள் ராசிநாதன் சூரியன் மாதம் முழுதும் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். எந்த வேலையையும் எடுத்தோம் முடித்தோம் என்ற இடத்திற்கு வருவீர்கள் என்றாலும், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் நட்புகள் வழியே  சங்கடத்தை ஏற்படுத்தலாம். கணவன், மனைவிக்குள் வாக்குவாதம், பிரச்னை உண்டாகலாம். அந்நியரால் குடும்பத்திற்குள் குழப்பம் வரலாம் என்பதால் தம்பதியர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கூட்டுத் தொழிலில் பங்குதாரரை அனுசரித்துச் செல்வது அவசியம். பணியாளர்கள் மேலதிகாரியின் ஆலோசனையை ஏற்பதால் சங்கடம் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அதன் காரணமாக வேறு இடத்தில் குடியேறும் நிலை ஏற்படும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவர். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் மனதில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக புதியவர்களால் சங்கடம் அதிகரிக்கும். பிப். 20 வரை புதனும் சப்தம ஸ்தானத்தில் இருப்பதால் உடல் பிரச்னைகளும், எதிர்பார்ப்புகளில் இழுபறியும் ஏற்படும். மார்ச் 6 முதல் சனி அஷ்டம ஸ்தானத்திற்கு செல்வதால் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. எதையும் யோசித்து செய்வது அவசியம். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. வியாபாரிகளுக்கு கணக்கு வழக்கில் கவனம் தேவை.  மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.சந்திராஷ்டமம்: பிப். 21அதிர்ஷ்ட நாள்: பிப். 19, 28. மார்ச். 1, 10பரிகாரம்அக்னீஸ்வரரை வழிபட அல்லல் போகும். நன்மை நடக்கும்.

உத்திரம் 2, 3, 4 ம் பாதம்அறிவு, ஆற்றலால் வெற்றி பெறும் உங்களுக்கு மாசி யோகமான மாதமாகும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வாழ்வில் புதிய பாதை தெரியும். நடக்காது, முடியாது என நீங்கள் கைவிட்ட வேலைகளையும் மீண்டும் கையில் எடுத்து ஆதாயம் காண்பீர்கள். உங்களுக்கிருந்த சங்கடம், நெருக்கடி, பிரச்னை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை, மெமோ என்றிருந்த நிலை எல்லாம் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடம் மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். பெண்களுக்கு உடல்நிலை, மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும்.  சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களும் இந்த நேரத்தில் மனம் மாறுவர். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்குவதற்காக அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவர். வராமல் இருந்த பணம் வரும் கொடுக்கல் வாங்கல் சீராகும். மனதில் இருந்த சங்கடம் விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: பிப். 21, 22அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 19, 23, 28. மார்ச். 1, 5, 10, 14பரிகாரம்அக்னீஸ்வரரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.அஸ்தம்மனதில் தெளிவும் செயலில் உறுதியும் கொண்ட உங்களுக்கு மாசி அதிர்ஷ்டமான மாதம். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி எல்லாம் விலகும். நீங்களே ஆச்சரியப்படும் வகையில் உங்களின் நிலை உயரும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சூரியன், ராகு, மார்ச் 6 வரை சனி சஞ்சப்பதுடன், பிப். 21 முதல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். தொழில் முன்னேற்றம் அடையும். தள்ளிப்போன வேலைகள் முடிவிற்கு வரும். பொருளாதார நிலை உயரும். உடல்நிலை சீராகும். மருத்துவச்செலவு குறையும். சுயதொழில் செய்பவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விற்பனையில் இருந்த மந்தநிலை மாறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு செயல்படும் நிலை உருவாகும். சட்ட சிக்கல்களால் முடங்கிய தொழில் மீண்டும் செயல்படத் தொடங்கும். அரசு வழியில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அசாத்தியமான துணிச்சலும், வெளி வட்டாரத்தில் செல்வாக்கும் உருவாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வேலை தேடும் முயற்சியில் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரம், தொழிலில் இருந்த எதிர்ப்பு விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களிடமே சமாதானம் பேசுவதற்கு வருவர். உடல் பாதிப்பு விலகும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் நிலை உருவாகும். பிப். 20 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்களின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். எதிர்பார்ப்பு நிறைவேறும். சந்திராஷ்டமம்: பிப்.22, 23அதிர்ஷ்ட நாள்: பிப்.14, 20. மார்ச். 2, 5, 11, 14பரிகாரம்காமாட்சி அம்மனை வழிபட சங்கடம் தீரும். நன்மை நடக்கும்.சித்திரை 1, 2 ம் பாதம்தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் மூலதனமாக கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் நன்மையான மாதமாகும். கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியான செவ்வாய் பிப். 21 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். பொருளாதார நிலை உயரும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வம்பு வழக்குகளால் சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். குடும்பத்திற்குள் நிம்மதியான சூழ்நிலை உருவாகும் செய்துவரும் தொழிலில் ஆதாயம் கூடும். எதிர்ப்பு போட்டி என்ற நிலையெல்லாம் மாறும். சூரியன், ராகு சஞ்சார நிலைகளும் சாதகமாக இருப்பதால் உங்கள் வாழ்வின் நீண்ட நாள் கனவுகள் இப்போது நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைப்பதுடன் புதிய பொறுப்பும் பதவியும் கிடைக்கும். செல்வாக்கு உயரும். வயதானவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பெண்களுக்கு இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பிப். 20 முதல் மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: பிப். 23.அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 18, 27. மார்ச். 5, 9, 14.பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.

சித்திரை 3, 4 ம் பாதம்உழைப்பால் உயரும் உங்களுக்கு, தனாதிபதியும் சப்தமாதிபதியுமான செவ்வாய் பிப்.21 வரை சுகஸ்தானத்திலும், அதன் பின் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வேலைப்பளு கூடும். அலைச்சல் அதிகரிக்கும். எடுக்கும் வேலைகளில் நெருக்கடி தோன்றும். பிள்ளைகளின் வழியே சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உறவுகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி ஏற்படும். பூர்வீக சொத்து விவகாரத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திக்க நேரும் என்றாலும், மார்ச் 6 முதல் சனி பகவான் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் புதிய பாதை தெரியும். இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்கள் உங்கள் பாதையில் இருந்து விலகுவர். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். விருப்பம் பூர்த்தியாகும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வித்யாகாரகன் புதன் பிப்.20 முதல் வக்கிரமடைவதால் மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக படிப்பது அவசியம். இடம், வீடு வாங்குபவர்கள் மூலப்பத்திரத்தை நன்கு ஆய்வு செய்யவும். தம்பதியர் ஒருவருவருக்கொருவர் ஆலோசித்து செயல்படுவது நலம் தரும். சந்திராஷ்டமம்: பிப்.23, 24அதிர்ஷ்ட நாள்: பிப்.15, 18, 27. மார்ச் 6, 9பரிகாரம்திருத்தணி முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்சுவாதிஎதிலும் முதன்மை பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு,  மாசி நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். யோகக்காரகனான ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்திற்குள்  குழப்பம் இருக்கும். இன்று நடந்து விடும் என எதிர்பார்த்த வேலைகளில் கூட இழுபறி ஏற்படும். மனம் ஒரு நிலையில் இருக்காது. பெரியவர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு தோன்றும். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேதுவால் வாழ்க்கைக்குரிய அடிப்படை வசதி நிறைவேறும். தேவைக்குரிய பணம் வந்து கொண்டிருக்கும். நடக்க வேண்டிய வழக்கமான வேலைகள் நடந்து கொண்டிருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். வேலையில் நெருக்கடி இருந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி இருக்கும். பிப்.21 முதல் செவ்வாயும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.  லாபாதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சங்கடம் ஏற்படலாம்.  ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரிகள் புதிய முதலீட்டை மேற்கொள்ளும் முன் சந்தை நிலவரத்தை கவனிப்பது நல்லது. தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் இழுபறியாகும் அல்லது எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருப்பது நன்மை தரும். பெண்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது அவசியம். சந்திராஷ்டமம்: பிப்.24, 25அதிர்ஷ்ட நாள்: பிப்.15, 22, மார்ச். 4, 6, 13பரிகாரம்வெங்கடாஜலபதியை வழிபட சங்கடம் விலகும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம்சூழல் அறிந்து செயல்படும் உங்களுக்கு, மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும் தனகாரகன் குரு பாக்கிய ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். சரியாக திட்டமிட்டு செயல்படும் வேலைகளிலும் இழுபறி ஏற்படும். உங்கள் கவனக்குறைவால் சில வேலைகள் தள்ளிப் போகும். வரவேண்டிய வருமானம் தடைபடும். பணியாளர்கள் அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. மேலதிகாரியை அனுசரித்துச் செல்லவும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு  வேலைப்பளுவும் மனதில் ஏதேனும் குறை இருந்து கொண்டே இருக்கும். அதற்காக வேறு வேலைகளைத் தேட முயற்சிக்க வேண்டாம். பணப் பொறுப்பில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வியாபாரிகள  புதிய முதலீடுகளை இந்த மாதத்தில் தள்ளிப்போடுவது நல்லது. வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்பவர்கள் சட்ட ரீதியான விவகாரங்களில் கவனமாக இருப்பது அவசியம். சூரியன், ராகு, செவ்வாயால் நெருக்கடி ஏற்பட்டாலும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும், மார்ச் 6 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், மார்ச் 3 வரை ராசிநாதன் சுக்கிரனும் உங்களைப் பாதுகாப்பர். தேவையான பணம் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை நீடிக்கும். புதிய முதலீடு, இடம் வாங்குவது விற்பது போன்ற விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். யாரையும் நம்பி இந்த நேரத்தில் புதிய வேலையில் ஈடுபட வேண்டாம். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். உறவினராக இருந்தாலும் அவர்களிடம் ஓரடி விலகி இருப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: பிப். 25அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 21, 24. மார்ச். 3, 6, 12பரிகாரம்நரசிம்மரை வழிபட விருப்பம் நிறைவேறும்.

விசாகம் 4 ம் பாதம்துணிச்சலும் தன்னம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு, மாசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். உங்கள் தன குடும்பாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியுமான குரு அஷ்டம ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருப்பதால் மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நட்பு வட்டத்தால் ஆதாயம் ஏற்படும். கூட்டுத் தொழில் முன்னேற்றம் அடையும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்த்து வரும் சனி பகவான் மார்ச் 6 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்வதால் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எந்த வேலையை எடுத்தாலும் அதில் ஒரு தடை, நெருக்கடி என்றிருந்த நிலை மாறும். நீண்ட நாள் பிரச்னைகள் முடிவிற்கு வருவதுடன் எதிர்பார்த்த பணமும் வரும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்பட ஆரம்பிக்கும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: பிப்.26அதிர்ஷ்ட நாள்: பிப்.18, 21, 27. மார்ச் 3, 9, 12பரிகாரம்மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.அனுஷம்முயற்சிகளில் தடைகளை சந்தித்தாலும் அதைப் பாடமாக ஏற்கும் உங்களுக்கு, மாசி மாதம் நன்மையான மாதம். சகாய, சுக ஸ்தானாதிபதியான சனி பகவான் மார்ச் 6 வரை அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரித்து உடல் நிலையில் பாதிப்பு, வேலைப்பளு, நெருக்கடியை ஏற்படுத்தினாலும், மார்ச் 6 முதல் கடந்த இரண்டரை ஆண்டாக உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். எடுத்த வேலைகள் நடந்தேறும். மனதில் இருந்த குழப்பம் விலகும். பயம் போகும். ஆரோக்கியம் சீராகும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் வரும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். ராசிநாதன் செவ்வாய் பிப்.21 வரை சகாய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் காரியம் நடந்தேறும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். இதுவரை நெருக்கடிகளை சந்தித்த உங்களுக்கு இந்த மாதம் அதில் இருந்து விடுபடும் நிலை உண்டாகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். மாணவர்களுக்கு குழப்பம் விலகி படிப்பில் கவனம் செல்லும்.சந்திராஷ்டமம்: பிப். 26, 27அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 18. மார்ச் 8, 9பரிகாரம்முருகப்பெருமானை வழிபட சங்கடங்கள் விலகும்.கேட்டைதுணிச்சலுடன் செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, மாசி மாதம் யோகமான மாதம். பிப். 20 வரை புத ஆதித்ய யோகம் இருப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்களுக்கு இருந்த சங்கடம் விலகும். ஜீவனாதிபதி சூரியன் கேந்திர பலம் பெறுவதால் அரசுவழி முயற்சிகள் லாபமாகும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பிப்.21 வரை ராசி நாதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் மாதத்தின் தொடக்கத்திலேயே உங்கள் நிலையில் உயர்வு ஏற்படும். நீண்டநாள்  கனவு நனவாகும். போராட்டம், நெருக்கடி, பிரச்னை என வாழ்ந்து வந்த நிலையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவி, பிள்ளைகள் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். விவசாயத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் இருந்த பயம், குழப்பம் நீங்கும். ஆடை, ஆபரணம் சேரும். மாணவர்களுக்கு மனதில் தெளிவு பிறக்கும்.சந்திராஷ்டமம்: பிப்.27அதிர்ஷ்ட நாள்: பிப்.14, 18, 23. மார்ச் 5, 9, 12பரிகாரம் லட்சுமி நாராயணரை வழிபட வெற்றி கிடைக்கும்.

மூலம்வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்து வாழும் உங்களுக்கு, மாசி மாதம் யோகமான மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்தது நடந்தேறும். மனதில் இருந்த குழப்பம் விலகும். பெரிய மனிதர்களின் ஆதரவு ஏற்படும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாளாக முயற்சித்து வந்தும் முடிவிற்கு வராத வேலைகள் இப்போது நிறைவேறும். சப்தமாதிபதி புதன் வக்கிரம் அடைவதால் அதை திட்டமிட்டு செயல்படுவது நன்மை தரும்.  பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் ஒரு முறைக்கு இருமுறை படித்துப் பார்ப்பது நன்மையாகும். புதிய முதலீடு செய்வதற்கு முன் மார்க்கெட் நிலவரம் தெரிந்து கொள்வது அவசியம். புதிய இடம், வீடு வாங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பெரியோரின் ஆலோசனை இந்த நேரத்தில் உங்களுக்கு பயனளிக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஆலோசித்து எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். மார்ச். 6 முதல் அர்த்தாஷ்டம சனி தொடங்குவதால் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவைப்படும். சனி பகவானின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம். மனதில் குழப்பம் உண்டாகலாம். எடுக்கும் வேலைகளில் தடை, தாமதம் என்ற நிலை உருவாக வாய்ப்பு இருப்பதால் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.சந்திராஷ்டமம்: பிப்.28அதிர்ஷ்ட நாள்: பிப்.16, 21, 25. மார்ச் 3, 7, 12பரிகாரம்விநாயகரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.பூராடம்லட்சியத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, மாசி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி, பிரச்னைகள் முடிவிற்கு வரும். வியாபாரிகளுக்கு ஏற்பட்ட தடைகள் விலகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மூலதனத்திற்கு ஏற்ப ஆதாயம் உண்டாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், ராகுவும் போட்டி போட்டுக் கொண்டு உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவர். எடுக்கும் வேலைகளை ஆதாயமாக்குவர். பொருளாதார நெருக்கடி என்பது இந்த மாதத்தில் இருக்காது. தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும்.  சிலருக்கு புதிய சொத்து சேரும். உங்கள் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயும் பிப்.22 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சகோதரர் ஒற்றுமை அதிகரிக்கும். தன்னம்பிக்கை, தைரியம் கூடும். உடல் பாதிப்பு விலகும். துணிச்சலுடன் செயல்படும் நிலை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். விவசாயம், மருத்துவம், கெமிக்கல், உணவகம் தொழில்கள் முன்னேற்றம் அடையும் என்றாலும், மார்ச் 6 முதல் உங்கள் தன குடும்பாதிபதி சனி பகவான் சகாய ஸ்தானத்தை விட்டு சுக ஸ்தானத்திற்கு செல்வதால் அலைச்சல் அதிகரிக்கும். வேலைப்பளு கூடும்.  பணியாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 1அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 21, 24. மார்ச் 3, 6, 12பரிகாரம்கோமதி அம்மனை வழிபட குறைகள் தீரும். நன்மை நடக்கும்.உத்திராடம் 1 ம் பாதம்முதலிடத்தை நோக்க முன்னேற விரும்பும் உங்களுக்கு, மாசி மாதம் முன்னேற்றம் தரும். ஆத்ம காரகன் சூரியன், யோகக்காரகன் ராகுவுடன் இணைந்து சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். செல்வாக்கு உயரும். நேற்று வரை கேள்விக்குறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். லாபம் தரும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை உண்டாக்கும். பிப்.22 முதல் தைரிய வீரிய காரகன் செவ்வாயும் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழில், வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். பொருளாதார நிலை உயரும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். உடல் பாதிப்பு இருந்த இடம் தெரியாமல் போகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்களும் மீண்டும் சேரும் நிலை உண்டாகும். தெய்வத்திடம் வைத்த வேண்டுதல் நிறைவேறி கோயிலுக்கு சென்று மகிழ்வீர்கள்.  பெரிய மனிதர்களின் ஆதரவும் தெய்வ அருளும் கிடைக்கும்.  எடுத்த வேலைகளில் வெற்றியுண்டாகும் என்றாலும், வித்யா காரகன் புதன் வக்கிரமடைவதால் மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியம். சந்திராஷ்டமம்: மார்ச் 2அதிர்ஷ்ட நாள்: பிப்.19, 21, 28. மார்ச் 1, 3, 10, 12பரிகாரம்நடராஜரை வழிபட தோஷம் விலகும். நன்மை நடக்கும்.

உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்எந்த இடத்தில் பிறந்திருந்தாலும் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைகின்ற உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியான சூரியன் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதிற்குள் இனம் புரியாத குழப்பம் இருக்கும். வேலையில் வெற்றி கிடைக்குமா என யோசிப்பீர்கள். குடும்பத்திலும் நிம்மதி சற்று குறையும். உங்களது பேச்சால் வீண் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வரவு, செலவிலும் எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படும். குடும்ப உறவுகளுடன் ஒரு இடைவெளி இருக்கும். உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியான சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் தேவையான பணம் வரும். தொழிலில் வழக்கமான நிலை இருக்கும். வாழ்க்கைத்துணை  உறுதுணையாக இருப்பார். மேலதிகாரியை அனுசரித்துச்செல்வது நன்மையை ஏற்படுத்தும். எடுத்த வேலைகளில் உறுதியாக இருப்பதும், புதிய முயற்சிகளில் கவனம் செலுத்துவதும் அவசியம். வெல்லாமை வீடு வந்து சேரும்வரை விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும். பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. சந்திராஷ்டமம்: மார்ச் 2.அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 19, 26, 28. மார்ச் 1, 8, 10.பரிகாரம்அருணாச்சலேஸ்வரரை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.திருவோணம் பிறந்ததில் இருந்து முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு சூரியன் உங்கள் முயற்சிகளில் தடைகளை ஏற்படுத்துவர். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். யாரை நம்பி இருந்தீர்களோ அவர்களும் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடுவார்கள். சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் இந்த நிலையில் மாற்றம் இருக்கும். வியாபாரிகளுக்கு பண வரவில் தடை ஏற்படும்.  பணியாளர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். சிலருக்கு உடல் நிலையிலும் பாதிப்பு ஏற்படும் என்றாலும், மார்ச். 6 முதல் ராசி நாதன் சனி பகவான் சகாய ஸ்தானத்திற்கு செல்வதால் ஏழரை ஆண்டுகளாக அனுபவித்து வந்த நெருக்கடிகள் முடிவிற்கு வரும். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்ததுபோல் உங்கள் நிலைமாறும். வீண் செலவு, அலைச்சல் என்றிருந்த நிலை மாறும். ஆதாயத்திற்குரிய வழிகளில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்திலும் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பிப். 20 வரை உங்கள் பாக்யாதிபதி புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும். சந்திராஷ்டமம்: மார்ச் 3.அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 20, 26. மார்ச் 2, 8, 11.பரிகாரம்வடிவுடை அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்எடுத்த வேலையில் வெற்றி அடைவதற்காக மலையளவு முயற்சிகளை மேற்கொள்கின்ற உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிக்கு லாபாதிபதியும், சுகாதிபதியுமான செவ்வாய் பிப். 21 வரை ராசிக்குள்ளும், அதன் பிறகு தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். சில வேலைகளில் திட்டமிடாமல் இறங்கி, சங்கடத்திற்கு ஆளாவீர். உடல் நிலையிலும் உஷ்ணம் சார்ந்த பாதிப்புகள் தோன்றும். வியாபாரத்தில் மறைமுகத் தொல்லைகளும் எதிர்ப்பும் தோன்றும் என்றாலும், மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிக்கும் சுக்கிரனும், மார்ச். 6 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி நாதனும், பிப். 20 வரை புதனும் உங்களைப் பாதுகாப்பர். எந்தநிலை வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி உங்களுக்கு உண்டாகும். எதிர்பார்க்கும் அளவிற்கு வரவு வந்தாலும் அதற்கேற்ற செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்திலும் வெளிவட்டாரத்திலும் மறைமுக எதிர்ப்புகள் உங்களை சங்கடப்படுத்தும். சகபணியாளர்களின் வேலைகளை நீங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். வியாபார ரீதியாக திடீரென வெளியூர் பயணம் ஏற்படும். குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளியும் இந்த நேரத்தில் உருவாகும். சூரியன், ராகு, செவ்வாய் சஞ்சாரம் உங்கள் நிலையில் பின்னடைவை உண்டாக்கும், பொருளாதார நிலையிலும் சங்கடங்களை அதிகரிக்கும். ஆனாலும் அதை நிதானமாக கையாண்டு வெற்றி பெறுவீர்.  குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று பெண்கள் செயல்படுவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 4.அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 18, 26, 27. மார்ச் 8, 9.பரிகாரம்திருப்போரூர் முருகனை வழிபட சங்கடங்கள் விலகும்.

அவிட்டம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் போராடி வெற்றியடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் உழைப்பால் உயர்வு காணக்கூடிய மாதமாகும். பிப். 21 வரை உச்சம் அடைந்திருக்கும் செவ்வாய் உங்கள் தைரியத்தை அதிகரிப்பார். வேலைகளை வெற்றியாக்குவார். செலவின் வழியே செல்வாக்கை உயர்த்துவார். பிப். 22 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் சிந்திக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது புதிய நபர்களால் படிப்பினையை உண்டாக்குவார். கணவன் மனைவிக்குள் ஒரு இடைவெளியை ஏற்படுத்துவார். நன்றாகப் பழகி வந்த நண்பர்களும் உங்களை விட்டு விலகிச் செல்லக்கூடிய நிலையை உருவாக்குவார். தொழில் உங்களி் எதிர்பார்ப்பு இழுபறியாகும் என்பதால், புதிய முயற்சிகளைத் தவிருங்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நிம்மதிக்கு வழிவகுக்கும். பணியாளர்கள் வேலையில் கவனமாக இருப்பது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 4.அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 18, 26, 27. மார்ச் 8, 9.பரிகாரம்வாயு மைந்தனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.சதயம்பெரிய பெரிய திட்டங்கள் தீட்டி அதைநோக்கி பயணித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் விழிப்புடன் செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு உங்கள் ஆசைகளை அதிகரிப்பார். பிறரால் முடிக்கமுடியாத வேலைகளைக்கூட முடிக்க வைப்பார். சப்தமாதிபதி சூரியன் மாதம் முழுவதும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் எடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்ற வேகம் உண்டாகும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும். மார்ச். 6 முதல் ஜென்ம சனி உங்களை விட்டு விலகுவதால் நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். பூர்வ புண்ணியாதிபதி புதன் பிப். 20 வரை எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். புதிய இடம் வீடு வாங்கும் கனவை நனவாக்குவார்.  குடும்பத்தில் நிம்மதியான நிலையை உண்டாக்குவார். வெளியூர் பயணத்தின் வழியே ஆதாயத்தை ஏற்படுத்துவார். பணியாளர்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும் என்றாலும் புதிய நட்புகளிடம் கவனமாக இருப்பது நல்லது. யாரிடமும் உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். உங்கள் ரகசியங்களையும் கூற வேண்டாம். பெண்கள் இந்த மாதம் முழுவதும் அந்நியர்களிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 5.அதிர்ஷ்ட நாள்: பிப். 13, 18, 22, 26. மார்ச் 4, 8, 13.பரிகாரம்விஷ்ணு துர்கையை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்தடைகளை எல்லாம் தாண்டி வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் சிந்தித்து செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் தன, லாபாதிபதியான குரு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் நிதானம் தேவை. எதையும் திட்டமிட்டு செய்தால் மட்டுமே லாபத்தை அடையமுடியும். ராசிக்குள் சூரியன், ராகு, மார்ச். 6 வரை சனி, பிப். 22 முதல் செவ்வாய் என்று கூட்டணி அமைத்திருப்பதால் ஒரே நேரத்தில் நான்கு பக்கங்களிலும் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாவீர்கள். வேலைகளில் நெருக்கடி அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் அவசர அவசரமாக இறங்கி அதில் சங்கடத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். புதிய முதலீடுகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் என்றாலும், மாதம் முழுவதும் உங்கள் பாக்யாதிபதி சுக்கிரன் சாதமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். பொன், பொருளும், புதிய வாகனமும் வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் கூடியேறுவீர்கள். மார்ச் 6 முதல் சனி பகவானின் பார்வை சுக ஸ்தானத்திற்கும், அஷ்டம ஸ்தானத்திற்கும் கிடைப்பதால் உடல் நிலையில் கவனம் செலுத்தி வருவது நல்லது. சட்டத்திற்குப் புறம்பான வேலைகளால் சங்கடம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றை ஒதுக்கி வைப்பது நன்மையை தரும். வியாபாரிகள் கணக்கு வழக்குகளை எப்போதும் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை இந்த மாதம் முழுவதும் உங்களை சரியான வழியில் நடைபோட வைக்கும். நண்பர்களை அனுசரித்துச் செல்வதால் உங்கள் பலம் கூடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். சந்திராஷ்டமம்: மார்ச் 6.அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 21, 26. மார்ச் 3, 8, 12.பரிகாரம்பண்ணாரி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.

பூரட்டாதி 4 ம் பாதம்எந்த ஒன்றாக இருந்தாலும் அதில் சிந்தித்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிநாதன் குரு பகவான் சுக ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் நிதானம் தேவை. விரய ஸ்தானத்தில் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் கையில் இருக்கும் பணம் கரையும். சிலருக்கு உடல் நிலையிலும் பாதிப்பு ஏற்படும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நன்மையாகும். புதிய முதலீடுகளிலும் நிதானம் வேண்டும். பிறரை நம்பி எந்த வேலையிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். உங்கள் சப்தமாதிபதி புதனும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் பிப். 20 முதல் வக்கிரம் அடைவதால் பண விவகாரங்களில் கவனம் தேவை. உங்கள் அவசரத் தேவைக்காக கடன் வாங்கும்போது வெற்று காசோலை, பிராம்சரி நோட்டு வழங்குவதை தவிர்க்கவும். வட்டி விவகாரங்களில் நன்றாகப் பேசி தீர்த்துக் கொள்வது நன்மையாகும். பொதுவாக இந்த நேரத்தில் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை கேட்பதும் நன்மையை உண்டாக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 7.அதிர்ஷ்ட நாள்: பிப். 21. மார்ச் 3, 12.பரிகாரம்கல்யாண ஜகந்நாதனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.உத்திரட்டாதிகர்மக்காரகனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். மார்ச். 6 வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி செலவுகளை அதிகரிப்பார். அலைச்சலை ஏற்படுத்துவார். மனதில் நிம்மதியற்ற நிலையினை உண்டாக்குவார். மார்ச். 6 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி நிதானமற்ற போக்கினை உங்களுக்கு ஏற்படுத்துவார். திட்டமிடாமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாக வேண்டிவரும். சனி பகவானின் பார்வை நட்பு ஸ்தானத்திற்கு உண்டாவதால் உடனிருந்த நண்பர்களும் உங்களைவிட்டு செல்வர். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். மேல் அதிகாரியால் நெருக்கடி தோன்றும். தொழிலில் கூடுதல் கவனம் தேவை என்றாலும், பிப். 21 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயும், மாதம் முழுவதும் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் உங்களுக்கு வரும் நெருக்கடிகளை இல்லாமல் செய்வார்கள். தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போனதுபோல் சங்கடங்கள் எல்லாம் விலகும். உடல்நலம் மேம்படும். வம்பு, வழக்கு, எதிர்ப்பு என்றிருந்த நிலை மாறும். எதிர்பார்த்த பணம் வரும். படிப்பில் கவனம் செலுத்துவது நன்மையாகும். முடிந்தவரை இந்த மாதத்தில் வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். சந்திராஷ்டமம்: மார்ச் 7, 8.அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 21, 26. மார்ச் 3, 12.பரிகாரம்தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.ரேவதிபுத்தி சாதுரியத்துடன் பிறருக்கு வழிகாட்டும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். வித்யா காரகன் புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், பிப். 20 முதல் வக்கிரமடைவதால் பண விவகாரங்களில் எச்சரிக்கைத் தேவை. உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும் பிப். 21 வரை உங்கள் தனாதிபதியும், பாக்யாதிபதியுமான செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாதம் முழுவதும் சூரியன், ராகு, புதன், பிப். 22 முதல் செவ்வாய் என்று விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவு, செலவில் கவனம் தேவை. பணப் பொறுப்பில் இருப்பவர்களும், வெளியூருக்கு பணத்துடன் செல்பவர்களும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். பணியாளர்கள் மேல் அதிகாரியின் ஆலோசனையை ஏற்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுத்துக்கொள்வதால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 8, 9.அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 21, 23. மார்ச் 3, 5, 12, 14.பரிகாரம்ஸ்ரீநிவாசனை வழிபட வாழ்வில் வளம் கூடும். நன்மை உண்டாகும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us