sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜெர்மன் முதலீட்டை முந்தியது உள்நாட்டு முதலீடு: முதல்வர் பெருமிதம்

/

ஜெர்மன் முதலீட்டை முந்தியது உள்நாட்டு முதலீடு: முதல்வர் பெருமிதம்

ஜெர்மன் முதலீட்டை முந்தியது உள்நாட்டு முதலீடு: முதல்வர் பெருமிதம்

ஜெர்மன் முதலீட்டை முந்தியது உள்நாட்டு முதலீடு: முதல்வர் பெருமிதம்


ADDED : செப் 12, 2025 12:38 AM

Google News

ADDED : செப் 12, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:''ஜெர்மன், பிரிட்டன் பயணத்தை முடித்து விட்டு, 15,516 கோடி ரூபாய் முதலீட்டுடன் தமிழகத்திற்கு திரும்பினேன். அதன் பின், மூன்றாவது நாளில் ஓசூரில் நடக்கும் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறேன்.

''இன்றைய மாநாட்டில், 24,000 கோடி ரூபாய் முதலீடுகள் கையெழுத்தாகின்றன. நம் சாதனையை நாமே முந்துகிறோம்,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், 'தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு - 2025' நேற்று நடந்தது.

இதில், 24,307 கோடி ரூபாய் முதலீட்டில், 49,353 பேர் வேலைவாய்ப்பை பெறும் வகையில், 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தாகின.தொழில் துறை அமைச்சர் ராஜா வரவேற்றார்.

மாநாட்டுக்கு தலைமை வகித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தை முடித்து விட்டு, 15,516 கோடி ரூபாய் முதலீட்டுடன் தமிழகத்திற்கு திரும்பினேன்.

அதன் பின், மூன்றாவது நாளில் ஓசூரில் நடக்கும் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறேன். இன்று இங்கு நடக்கும் மாநாட்டில், 24,000 கோடி ரூபாய் முதலீடுகள் கையெழுத்தாகின்றன.

நம் சாதனையை நாமே முந்துகிறோம். அதுமட்டுமல்ல, 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 1,210 கோடி ரூபாய் முதலீட்டில், நான்கு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.

தமிழக தொழில் வரைபடத்தில், தனித்த அடையாளம் பெற்ற நகரம் ஓசூர். இந்தியாவை கடந்து, உலகளவில் கவனத்தை ஈர்க்கும் நகரமாக ஒளி வீசுகிறது.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு, 11.19 சதவீதத்தை தொட்டுள்ளது.

இந்த வளர்ச்சியை இன்னும் அதிகரிக்க, முதலீட்டாளர்கள் மாநாடுகள், முதலீட்டாளர்கள்

சந்திப்புகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 77 சதவீதம் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

ஸ்டாலின் என்ற பெயருக்கு, 'மேன் ஆப் ஸ்டீல்' -என்று பொருள். உறுதியோடு சொல்கிறேன். எக்கு போன்ற உறுதியுடன் என் இலக்குகளில் வெற்றி பெறுவேன். எம்.எஸ்.எம்.இ., துறை சார்பில் வரும் அக்., 9 மற்றும் 10ம் தேதிகளில், கோவையில், உலக புத்தொழில் மாநாடு நடக்கிறது.

உலகம் முழுதுமிருந்து வரும் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், இன்குபேட்டர்கள், புத்தொழில் முனைவோர் ஆகியோரை, ஒருங்கிணைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாடு, 'ஸ்டார்ட்-அப்' செக்டாரில், தமிழகத்தின் வளர்ச்சியை உலகிற்கு பறைசாற்றும். தமிழகம் முன்னேற உங்கள் பங்களிப்பு எந்நாளும் அவசியம்.இவ்வாறு, அவர் பேசினார்.

1,200 பேருக்கு வேலைவாய்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - பாகலுார் சாலையில், விஸ்வநாதபுரத்திலுள்ள எல்காட் தொழில் நுட்ப பூங்கா வளாகத்தில், 1,100 கோடி ரூபாய் முதலீட்டில், 1,200 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில், 'அசென்ட் சர்க்யூட்ஸ்' நிறுவன இரண்டாவது யூனிட் அமைக்கப்பட உள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இங்கு, 'மல்டி லேயர்' மற்றும் 'எச்.டி.ஐ., பிரிண்ட்ர்டு சர்க்யூட்ஸ்' போர்டு உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்நிறுவனம் கடந்தாண்டு ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.



ஓசூரில் சர்வதேச விமான நிலையம்

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஓசூரில், 2,000 ஏக்கரில் உலக தரம் வாய்ந்த அதிநவீன கட்டமைப்பு வசதிகளுடன் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க முக்கியத்துவம் தருகிறோம். இந்த புதிய விமான நிலையத்தை அமைக்க, ஓசூரை சுற்றியிருக்கும் பொருத்தமான நிலப்பகுதி அடையாளம் காணப்பட்டு, அதை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை, 'டிட்கோ' மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.



'மின்சாதன ஏற்றுமதியில் தமிழகம் 100 பில்லியன் என்ற மைல்கல்'

ஓசூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் அசென்ட் சர்க்யூட்ஸ் நிறுவன அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா பேசியதாவது: தமிழகத்தில் இதுவரை வரலாறு காணாத வளர்ச்சியை அனைத்து பகுதிகளுக்கும் முதல்வர் கொண்டு சேர்த்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வாயிலாக, 1970ம் ஆண்டுகளில், ஓசூரில் டி.வி.எஸ்., போன்ற பல நிறுவனங்கள் வந்து தொழில்புரட்சி நடந்தது. தற்போது, தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும்,தமிழக முதல்வர் ஸ்டாலின் காலக்கட்டத்தில் தான் தொழில் வளர்ச்சி நடக்கிறது. தமிழகம் மின்சாதன ஏற்றுமதியில் விரைவில், 100 பில்லியன் மைல்கல்லை எட்டும். தமிழகம் வெவ்வேறு தொழில் சார்ந்த முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us