நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த பிடாகத்தை சேர்ந்தவர் பாண்டு, 70; இவர் நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

