ADDED : ஜன 01, 2026 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: இறந்துகிடந்த அடையாளம் தெரியாத பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் நிழற்குடையில், 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து இறந்துகிடந்த பெண் குறித்து விசாரிக்கின்றனர்.

