/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் விபத்தில் காயமடைந்தவர் சாவு
/
பைக் விபத்தில் காயமடைந்தவர் சாவு
ADDED : டிச 28, 2025 05:05 AM
வானுார்: ஆரோவில் அருகே நாய் மீது மோதிய விபத்தில் படுகாயமடைந்த தனியார் டிரான்ஸ்போர்ட் மேலாளர் இறந்தார்.
புதுச்சேரி, கோரிமேடு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் லோகநாதன், 50; பட்டானுாரில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 20ம் தேதி பணி முடிந்து, வீட்டிற்கு ஸ்கூட்டரில் திண்டிவனம்-புதுச்சேரி பைபாஸ் சர்வீஸ் ரோடு வழியாக சென்றார்.
தனியார் இரும்பு கடை எதிரே சென்றபோது, சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த அவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார். ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

