/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய போலீஸ் ஸ்டேஷன் பொங்கலுாரில் திறப்பு
/
புதிய போலீஸ் ஸ்டேஷன் பொங்கலுாரில் திறப்பு
ADDED : டிச 23, 2025 07:40 AM

பொங்கலுார்: பொங்கலுாரில் பழைய ஊராட்சி ஒன்றிய கட்டடத்தின் ஒரு பகுதியில் புதிதாக காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
பொங்கலுாரில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, எம்.பி. கணபதி ராஜ்குமார், எஸ்.பி. கிரிஷ் அசோக் யாதவ், மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் பத்மநாபன், பல்லடம் நகர தி.மு.க., செயலாளர் ராஜேந்திர குமார், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பாலுசாமி, கனகராஜ், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பிரகாஷ், சுவாமி விவேகானந்தா நற்பணி மன்ற செயலாளர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட கள்ளிப்பாளையம், வடமலை பாளையம், காட்டூர்; அவிநாசி பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொங்கலுார், உகாயனுார்; பல்லடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாதப்பூர் என ஆறு ஊராட்சிகள் பொங்கலுார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.

