ADDED : செப் 23, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூரில், 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழிலாளியை 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரை சேர்ந்தவர் சுரேஷ், 38. தச்சு தொழிலாளி. தனது வீட்டருகே 12 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார் சுரேஷ் மீது 'போக்சோ' வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.