/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
/
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
ADDED : செப் 09, 2025 10:38 PM
திருத்தணி:திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
திருத்தணி - அரக்கோணம் சாலையில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நண்பகல் 11:00 - மதியம் 1:30 மணி வரை நடைபெறுகிறது.
பழுதடைந்த மின்மீட்டர், பழுதடைந்த மின்கம்பம், குறைந்த மின்அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து, இந்த கூட்டத்தில் மனு அளிக்கலாம்.
திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மின்நுகர்வோர்கள், இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்களது பிரச்னைகளை தெரிவிக்கலாம் என, திருத்தணி மின்வாரிய பொறுப்பு செயற்பொறியாளர் தெரிவித்தார்.