/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொகுப்பூதிய நர்சுகள் 3ம் நாள் போராட்டம்
/
தொகுப்பூதிய நர்சுகள் 3ம் நாள் போராட்டம்
ADDED : டிச 23, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்; தமிழகம் முழுவதும், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொகுப்பூதிய செவிலியர்கள், பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை போர்-டிகோவில், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, பணி புறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டத்தை கடந்த, 20ல் தொடங்கினர். நேற்று மூன்றாம் நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம் நீடித்தது. சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சவுமியா தலைமை வகித்தார்.

