/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளியில் எழுத்தறிவு தேர்வில் 50 பேர் பங்கேற்பு
/
அரசு பள்ளியில் எழுத்தறிவு தேர்வில் 50 பேர் பங்கேற்பு
அரசு பள்ளியில் எழுத்தறிவு தேர்வில் 50 பேர் பங்கேற்பு
அரசு பள்ளியில் எழுத்தறிவு தேர்வில் 50 பேர் பங்கேற்பு
ADDED : டிச 15, 2025 07:22 AM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 15 வயதிற்கு மேற்-பட்ட எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு, அடிப்-படை எழுத்தறிவு கல்வி வழங்கும் வகையில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கடந்த, 2022ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
நடப்-பாண்டு எழுத, படிக்க தெரியாத, 34,500 பேர் கண்-டறியப்பட்டு, முதற்கட்டமாக கடந்த ஜூன், 15ம் தேதி, அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடத்தப்பட்-டது. இரண்டாம் கட்டமாக கண்டறியப்பட்ட, 59,555 பேருக்கு, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள, 2,138 கற்போர் எழுத்தறிவு மையங்களில், கற்றல், கற்-பித்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, 59,555 பேருக்கும், அந்தந்த கற்போர் எழுத்தறிவு மையம் செயல்படும் பள்ளிகளில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு நேற்று நடந்தது. அதன்படி, ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநி-லைப்பள்ளியில் நடந்த தேர்வில், எழுத, படிக்க தெரியாமல் இருந்த, 50 பேர் பங்கேற்றனர்.
இதில் வடமாநிலத்தவரும் அடங்குவர்; பள்ளி தலைமையாசிரியர் பொன்நாகேஷ், தேர்வர்க-ளுக்கு வினாத்தாள்களை வழங்கினார். தன்னார்-வலர்கள் கோமதி மற்றும் சுஜாதா, சாந்தி பாய், ரம்யாதேவி உட்பட பலர் தேர்வு மையத்தை கண்-காணித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் காயத்ரி, தேர்வு மையத்தை பார்வையிட்டார்.

