sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சார் -பதிவாளர் அலுவலகத்தில் சோதனை; கணக்கில் வராத ரூ.1.93 லட்சம் சிக்கியது

/

சார் -பதிவாளர் அலுவலகத்தில் சோதனை; கணக்கில் வராத ரூ.1.93 லட்சம் சிக்கியது

சார் -பதிவாளர் அலுவலகத்தில் சோதனை; கணக்கில் வராத ரூ.1.93 லட்சம் சிக்கியது

சார் -பதிவாளர் அலுவலகத்தில் சோதனை; கணக்கில் வராத ரூ.1.93 லட்சம் சிக்கியது


ADDED : செப் 11, 2025 11:28 PM

Google News

ADDED : செப் 11, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை வெள்ளலூர் சார் -பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1.93 லட்சம் சிக்கியது.

வெள்ளலூரில் சிங்காநல்லூர் சார் - பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு இணை சார்- -பதிவாளராக ஜெஸிந்தா, சார்- பதிவாளராக ரகோத்தமன் உள்ளனர். இங்கு பத்திர பதிவில் முறைகேடுகள், பத்திர பதிவிற்கு லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார் எழுந்தது.

இந்நிலையில் நேற்று மாலை, 3:30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்.பி.ராஜேஷ் அறிவுறுத்தலில், இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், பிரபுதாஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழு, சார்- பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தது.

அலுவலக கதவுகள் மூடப்பட்டு, ஊழியர்கள் வெளியேறக்கூடாது என அறிவுறுத்தினர்.

தொடர்ந்து நடந்த சோதனையில் இணை சார் -பதிவாளர், சார்- பதிவாளர் அறைகளில் இருந்து கணக்கில் வராத, 1.93 லட்சம் ரொக்கம் சிக்கியது.

இதையடுத்து ஜெஸிந்தா, ரகோத்தமன், உதவியாளர் ரவிச்சந்திரன், மற்றும் புரோக்கர் ரமேஷ் ஆகிய நால்வரிடம் விசாரணை நடந்தது. ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக இரவு, 8:30 மணியை கடந்தும் விசாரணை நீடித்தது.

இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து அதிகாரிகள் சிக்குவது மூன்றாவது முறையாகும். இங்கு அதிகளவு பத்திர பதிவுகள் நடப்பதால், லஞ்சமும் அதிகளவு விளையாடுகிறது. யார் சிக்கினால் எனக்கென்ன எனும் நினைப்பில், பதவிக்கு வருவோர் லஞ்சம் பெற தயங்குவதில்லை.






      Dinamalar
      Follow us