UPDATED : டிச 20, 2025 08:53 AM
ADDED : டிச 20, 2025 08:54 AM
சென்னை:
போலீஸ் எஸ்.ஐ., பணிக்கு, நாளை நடக்க உள்ள எழுத்து தேர்வுக்கு, ஒரு லட்சத்து, 78,390 பேருக்கு நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, காவல் துறைக்கு, 1,352 எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணிக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், ஒரு லட்சத்து, 78,390 பேருக்கு நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டுஉள்ளன.
அவர்களுக்கு மாநிலம் முழுதும், நாளை, 46 மையங்களில், காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, முதன்மை தேர்வும், மாலை, 3:30 மணி முதல் 5:10 மணி வரை, தமிழ் மொழி தகுதிக்கான எழுத்து தேர்வும் நடைபெற உள்ளன.
இந்த முறை, காவல் துறை ஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவினருக்கு, ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு, காலை, 8:30 மணிக்கு முன்னதாகவே, விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என, அறிவிக்கப் பட்டு உள்ளது.

