மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி புதுச்சேரியில் வரும் 11ம் தேதி துவக்கம்
மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி புதுச்சேரியில் வரும் 11ம் தேதி துவக்கம்
UPDATED : டிச 09, 2023 12:00 AM
ADDED : டிச 09, 2023 04:19 PM
புதுச்சேரி:
புதுச்சேரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, நாளை மறுதினம் துவங்குகிறது.புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் மண்டல அறிவியல் கண்காட்சி, இந்திராநகர், இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த, 7ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதை அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பார்வையிட்டனர். அதேபோல பொதுமக்கள் தரப்பில், 272 பேர் பார்வையிட்டுள்ளனர்.கண்காட்சியின் இரண்டாம் நாளான, நேற்று காலை 10:00 மணிக்கு, மதிப்பீட்டாளர்கள் குழு, மாணவ - மாணவியரின் படைப்புகளை பார்வையிட்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். இதில் மாணவர் பிரிவில், 387 படைப்புகளில் சிறந்த 40 படைப்புகளும், ஆசிரியர் பிரிவில், 36 படைப்புகளில், சிறந்த 15 படைப்புகளும் தேர்வு செய்யப்பட்டன.இதில் மண்டல அளவில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள், வரும் 11ம் தேதி துவங்கும், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளன. இந்த கண்காட்சி வரும் 12ம் தேதி நிறைவு பெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை, கல்வித்துறை செயலர் ஆஷிஷ் மாதவ்ராவ் மோரோ, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, இணை இயக்குனர் சிவகாமி, துணை முதல்வர் சந்திரன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
