ADDED : ஆக 03, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி போதகர் கார்பரே நோபலை 2023 ஜூன் 26ல் தி.மு.க., முன்னாள் எம்.பி., ஞான திரவியத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. ஞானதிரவியம் உட்பட 33 பேருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிந்தனர். இவ்வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றத்தில் ஞான திரவியம் மேல்முறையீடு செய்தார்.
உச்ச நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை ரத்து செய்யவும், நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கவும் மறுத்தது. விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
-டில்லி சிறப்பு நிருபர்-