40 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து; 5 பயணிகள் பரிதாப பலி
40 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து; 5 பயணிகள் பரிதாப பலி
ADDED : செப் 12, 2025 07:32 AM

லக்னோ: உத்தரபிரதேசத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் 5 பேர் பலியாகினர்.
நேற்று மாலை ஹர்தோய் நகரில் இருந்து சென்று கொண்டிருந்த இந்த பஸ் லக்னோ அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் லாரி மீது மோதியது. இதனால், திசை மாறிய பஸ், சாலை பணிகள் நடந்து வருவதால், அங்கு தோண்டப்பட்டிருந்த 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் பஸ்ஸில் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்க உறுதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.