'ஒடிசி' பார்க்கப் போறீங்களா? முதலில் இதை படிங்க
உலகமே எதிர்பார்த்த 'ஒடிசி' படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. உலகின் முதல் முழுநீள ஐமேக்ஸ் தொழில்நுட்ப படம், சயின்ஸ் பிக்சன் கதைகள் மூலம் புகழ்பெற்ற படங்களை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன் இயக்கி உள்ள கிரேக்க காவிய திரைப்படம். தற்போது வெளியாகி அமெரிக்க ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால் ஆசிய நாடுகள் குறிப்பாக இந்தியாவில் படம் மெதுவாக நகர்கிறது, கதை புரியவில்லை என்பதான கருத்துகள் வெளிப்படுகிறது. இதேபோன்ற நிலையில் இதற்கு முந்தைய படமான 'ஓப்பன் ஹெய்மரிலும்' வந்தது. ஆனால் படம் வெற்றி பெற்றதோடு 7 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. இந்த படத்திற்கும் ஆஸ்கர் விருதுகள் கன்பார்ம் என்கிறார்கள். இந்த படத்தை பார்ப்பதற்கு முன்பு சில விஷயங்களை அறிந்து கொள்வது நல்லது.
இந்த படத்தில் செயற்கை லைட்டிங் பயன்படுத்தப்படவில்லை ஒரு தீபந்த வெளிச்சத்தில் காட்சி என்றால் நிஜமான தீபந்த வெளிச்சம்தான். சரித்திர படம் என்பதற்காக காட்சிகள் பிரமாண்டப்படுத்தப்படவில்லை. பளபளக்கும் உடைகள் இல்லை. சண்டை காட்சிகளில் சாகசம் இல்லை. இயல்பாகவே போர்கள் எப்படி நடந்திருக்குமோ அப்படியே படமாக்கப்பட்டுள்து.
நிஜமான அரண்மணைகள், காடுகள், பாலைவனங்களில் படமாக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் ஆண்டிற்கு முந்தைய கதை என்பதால் சில ஷெட்டுகள் மட்டுமே சினிமாவிற்காக அமைக்கப்பட்டது. மற்றபடி 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரசிகனை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே நோலனின் நோக்கமாக இருந்திருக்கிறது.