மத்திய அமைச்சருடன் தயாரிப்பாளர்கள் சந்தித்து பேசியது என்ன
மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி சென்னை வந்திருந்தார். அவரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி கே.எம். தமிழ்க்குமரன், துணைத் தலைவர் கமலக்கண்ணன், ஆர்.கே.சுரேஷ், செயலாளர் கதிரேசன், பொருளாளர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
இவர்களுடன் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஆந்திரா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், கேரளா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், கர்நாடகா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், மற்றும் தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
உள்ளூர் கேளிக்கை வரி நீக்கம், ஜிஎஸ்டி வரி குறைப்பு. படப்பிடிப்பு அனுமதிகளுக்கு சிங்கள் விண்டோ முறை, விருது தேர்வு கமிட்டியில் தென்னிந்திய சினிமாவிற்கு உரிய முக்கியத்தும், தணிக்கை வாரியத்தின் பிரச்சினை ஆகியவை குறித்து அமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். ஒன்றிய மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேசி நல்ல முடிவெடுப்பதாக அமைச்சரும் கூறினார்.