மோகன்லாலை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர்
மலையாளத்தில் கடந்த 2016ல் பஹத் பாசில் நடிப்பில் வெளியான படம் 'மகேஷிண்டே பிரதிகாரம்'. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பஹத் பாசிலுக்கு இந்த படத்தின் வெற்றி மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் தான் தேசிய விருது நடிகையான அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் திலீஷ் போத்தன். அதைத் தொடர்ந்து 'தொண்டிமுதலும் த்ரிக்சாட்சியும், ஜோஜி' என மீண்டும் தான் இயக்கிய இரண்டு படங்களிலும் பஹத் பாசிலை கதாநாயகனாக நடிக்க வைத்தார்.
இதனை தொடர்ந்து தற்போது பிசியான குணச்சித்திர நடிகராக நடித்து வருவதால் கிட்டத்தட்ட ஐந்து வருடமாக டைரக்ஷனை விட்டு ஒதுங்கி இருக்ந்தார். இந்த நிலையில் மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பும் அவர், மோகன்லால் நடிக்க இருக்கும் புதிய படத்தை இயக்க இருப்பதாக அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் சிபு பேபி ஜான் மற்றும் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் உறுதிப்படுத்தி உள்ளனர்.