sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மந்திர வித்தை

/

மந்திர வித்தை

மந்திர வித்தை

மந்திர வித்தை


ADDED : செப் 12, 2025 08:05 AM

Google News

ADDED : செப் 12, 2025 08:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருபாச்சாரியாரின் குருகுலத்தில் பாண்டவர்களும், கவுரவர்களும் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பந்து ஒரு கிணற்றுக்குள் விழுந்தது. அப்போது அழுக்குத்துணி உடுத்தி மீசை, தாடியுடன் வந்த துரோணர். ''கிணற்றைச் சுற்றி ஏன் நிற்கிறீர்கள்?'' என்றார்.

அவரது தோற்றம் துரியோதனனுக்கு அலட்சியத்தை ஏற்படுத்தியது.

''நான் எதற்கு நின்றால் என்ன?'' என்றான் அவன்.

ஆனால் அர்ஜுனன், ''சுவாமி... கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க வழி தெரியாமல் தவிக்கிறோம்'' என்றான்.

துரோணர் ஆர்வத்துடன், ''தம்பி உன் பெயர் என்ன?'' என்றார்.

''என் பெயர் அர்ஜுனன். குருகுலத்தில் படிக்கிறேன்'' என்றான்.

''நல்லது... நீருக்குள் விழுந்த பொருளை எடுக்கும் மந்திர வித்தையை கற்றுத் தருகிறேன்'' என்று சொல்லி அங்கு வளர்ந்த புற்களைப் பறித்தார்.

அர்ஜுனனின் காதில் மந்திரத்தை உபதேசம் செய்து விட்டு, ''அர்ஜுனா! மந்திரத்தை ஜபித்தபடி ஒவ்வொரு புல்லாக கிணற்றுக்குள் வீசு'' என்றார்.

அந்த புற்கள் ஒன்றுக்கொன்று

தொடுத்தபடி கயிறாக மாறியது. அதன் உதவியுடன் பந்தை மேலே கொண்டு வந்தான் அர்ஜுனன். பின்னாளில் அர்ஜூனன் சிறந்த போர்வீரனாக இருக்க இதுவே அடித்தளமிட்டது.






      Dinamalar
      Follow us