PUBLISHED ON : டிச 25, 2025 04:47 PM

அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவத்தைப் பறைசாற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை, உலகம் முழுவதும் இன்று மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பனி படர்ந்த வீதிகள் முதல் பளபளக்கும் தேவாலயங்கள் வரை, எங்கும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்திருந்தது.





சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதாபிமானத்தை வலியுறுத்தும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை, மக்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் விதைத்துள்ளது. இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் இந்தத் திருநாள், உலகிற்கு அமைதியின் செய்தியை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது.
-எல்.முருகராஜ்

