sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தண்ணீரை சேமிக்க இ - மெயிலில் பழைய செய்திகளை நீக்க உத்தரவு

/

தண்ணீரை சேமிக்க இ - மெயிலில் பழைய செய்திகளை நீக்க உத்தரவு

தண்ணீரை சேமிக்க இ - மெயிலில் பழைய செய்திகளை நீக்க உத்தரவு

தண்ணீரை சேமிக்க இ - மெயிலில் பழைய செய்திகளை நீக்க உத்தரவு

6


ADDED : ஆக 17, 2025 09:09 AM

Google News

6

ADDED : ஆக 17, 2025 09:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: பிரிட்டனில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் நிலையில், தண்ணீரை சேமிக்க, 'இ - மெயில்' எனப்படும் மின்னஞ்சலில் உள்ள பழைய செய்திகளை நீக்கும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 1967க்கு பின் கடும் வறட்சி நிலவுகிறது. அணைகள், ஆறுகள், குளங்களில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. ஆலோசனை கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதற் கிடையே வெயிலும் சுட்டெரித்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, தேசிய வறட்சி குழு மூலம் பிரிட்டன் அரசு ஒரு புதிய ஆலோசனையை வழங்கியது.

தண்ணீரை சேமிக்க இ - மெயிலில் உள்ள பழைய செய்திகளை பொது மக்கள் நீக்க வேண்டும் என்பது தான் அந்த ஆலோசனை. இந்த உத்தரவு விசித்திரமாக தோன்றியது. இ - மெயிலில் உள்ள பழைய செய்திகளை நீக்கினால் தண்ணீரை எப்படி சேமிக்க முடியும் என, பலரும் சமூக வலைதளங்களில் நையாண்டி செய்தனர்.

மேலும் சிலர், பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல், பழைய செய்திகளை நீக்கச் சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்தனர்.

பிரிட்டன் அரசின் விசித்திர உத்தரவுக்கு பின்னால் ஒரு காரணமும் உள்ளது. நம் டிஜிட்டல் வாழ்க்கையின் முதுகெலும்பாக தரவு மையங்கள் உள்ளன.  பிரிட்டனில் இந்த மையங்கள் ஏராளம். வலியுறுத்தல் இந்த மையங்கள் நீர் சார்ந்த குளிரூட்டும் அமைப்புகளை பயன்படுத்துகின்றன. அங்கு ஆவியாவதற்கு பயன்படும் குளிரூட்டும் கோபுரங்கள் கணிசமான அளவு நீரை பயன்படுத்துகின்றன. இதனால் நீர் தேவை அதிகரிக்கிறது.

இ - மெயிலில், 1 எம்.பி., இணைப்புடன் உள்ள தரவுகள் கூட அதிகப்படியான தண்ணீரை பயன் படுத்துகின்றன. இதனால் பழைய செய்திகளை நீக்குவதால் கணிசமான நீரை சேமிக்கலாம் என, பிரிட்டன் அரசு நம்புகிறது. இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.






      Dinamalar
      Follow us