sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கம்போடியா- தாய்லாந்து இடையே மீண்டும் போர் நிறுத்தம் அமல்: புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

/

கம்போடியா- தாய்லாந்து இடையே மீண்டும் போர் நிறுத்தம் அமல்: புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

கம்போடியா- தாய்லாந்து இடையே மீண்டும் போர் நிறுத்தம் அமல்: புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

கம்போடியா- தாய்லாந்து இடையே மீண்டும் போர் நிறுத்தம் அமல்: புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

1


ADDED : டிச 27, 2025 02:55 PM

Google News

1

ADDED : டிச 27, 2025 02:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளிடையே நடைபெற்று வந்த மோதலை முடிவுக் கொண்டு வருவதற்கான புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளாக தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. கடந்த ஜூலையில் இருநாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டது. 5 நாட்கள் நீடித்த மோதலில் இரு தரப்பிலும் 43 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் மற்றும் மலேஷிய அதிபர் அன்வர் இப்ராஹிம் ஆகியோரின் முயற்சியால், அக்டோபரில் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த சூழலில், கடந்த டிசம்பர் 7ம் தேதி நடந்த மோதலில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால், மீண்டும் இரு நாடுகளுக்கிடையே சண்டை துவங்கியது. எல்லைப்பகுதியில் வசித்த லட்சக்கணக்கான மக்கள் தங்களை வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த புதிய மோதல்களால் தாய்லாந்தில் 26 வீரர்கள் மற்றும் மக்கள் 44 பேர் கொல்லப்பட்டனர். தாய்லாந்து ராணுவ வீரர்கள் கம்போடிய பகுதியில் இருந்த விஷ்ணு சிலையை இடித்து அகற்றியது பரபரப்பை கிளப்பியது.

இருநாடுகளுக்கும் இடையே நிலவிய பதற்றமான சூழலை தணிக்க, மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் தலைமையில், மலேசியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் எதிரொலியாக இன்று (டிசம்பர் 27) ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, கம்போடியா மற்றும் தாய்லாந்து அரசுகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அடுத்த 72 மணி நேரத்திற்கு இந்த போர் நிறுத்தம் நீடித்தால், சிறைப்பிடித்துள்ள கம்போடியாவின் வீரர்கள் 18 பேர் விடுவிக்கப்படுவார்கள் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us