sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தாயகம் திரும்பிய ஆப்கானியர்களுக்கு ஜப்பான் ரூ.180 கோடி நிதியுதவி

/

தாயகம் திரும்பிய ஆப்கானியர்களுக்கு ஜப்பான் ரூ.180 கோடி நிதியுதவி

தாயகம் திரும்பிய ஆப்கானியர்களுக்கு ஜப்பான் ரூ.180 கோடி நிதியுதவி

தாயகம் திரும்பிய ஆப்கானியர்களுக்கு ஜப்பான் ரூ.180 கோடி நிதியுதவி


ADDED : டிச 27, 2025 08:59 PM

Google News

ADDED : டிச 27, 2025 08:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காபூல்: பிற நாடுகளில் இருந்து தாயகம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்காக ரூ.180 கோடி வழங்குவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆப்கானியர்கள், சொந்த நாடான ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வருகின்றனர். இந்தாண்டில் மட்டும் 23 லட்சம் பேர் தாயகம் திரும்பியுள்ளனர். இதுபோன்று நாடு திரும்பியவர்களுக்கு உதவுவதற்காக ரூ.180 கோடியை மனிதாபிமான நிதியாக வழங்குவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

ஜப்பானின் இந்த உதவிக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஐநா அகதிகள் நல ஆணையம் நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், ' ஆப்கானிஸ்தானுக்கு திரும்பும் அகதிகளுக்கு உதவுவதற்காக ரூ.175 கோடி நிதியுதவி வழங்கிய ஜப்பானுக்கு நன்றி. இந்த நிதி அகதிகளின் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய உதவியையும் வழங்க உதவும். ஆப்கன் மக்களுடனான ஜப்பானின் தொடர்ச்சியான உறவு மற்றும் ஒற்றுமையை நாங்கள் மதிக்கிறோம்,' எனக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு முதல் இதுவரையில் ஆப்கானிஸ்தானுக்கு ரூ.4900 கோடி நிதியுதவி ஜப்பான் வழங்கியிருப்பதாக ஜப்பானுக்கான ஆப்கன் தூதரகம் தெரிவித்துள்ளது






      Dinamalar
      Follow us