sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சீனாவில் வெள்ளத்திற்கு 17 பேர் பலி

/

சீனாவில் வெள்ளத்திற்கு 17 பேர் பலி

சீனாவில் வெள்ளத்திற்கு 17 பேர் பலி

சீனாவில் வெள்ளத்திற்கு 17 பேர் பலி


ADDED : ஆக 09, 2025 07:16 AM

Google News

ADDED : ஆக 09, 2025 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஜிங் : சீனாவில் கடந்த, 48 மணி நேரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, 17 பேர் உயிரிழந்தனர், 33 பேர் காணாமல் போயுள்ளனர்.

அண்டை நாடான சீனாவில், தலைநகர் பீஜிங் உட்பட பல மாகாணங்கள் கடந்த ஒரு மாதமாகவே பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இரண்டு வாரங்களுக்கு முன் பீஜிங்கில் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 44 பேர் உயிரிழந்தனர். இதில் மியுன் மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 31 பேரும் அடங்குவர்.

இந்நிலையில், கன்சு, குவாங்டாங் உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 48 மணி நேரத்தில் கன மழை கொட்டித்தீர்த்தது.

பலத்த காற்றும் வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சேறும் சகதியுடன் பாய்ந்த வெள்ளம் பல வீடுகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியது.

கனமழையால் கன்சு மாகாணத்தின் யுஷோங், லான்ஜோ உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு இடங்கள் பாதிப்புக்குள்ளாகின. இதனால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

கன்சு மாகாணத்தில் மட்டும் மழை வெள்ளத்தில் சிக்கி, 10 பேர் உயிரிழந்தனர், 33 பேர் காணாமல் போயினர்.

இதேபோன்று குவாங்டாங் மாகாணத்தின், குவாங்சோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் இறந்தனர், ஏழு பேர் காயமடைந்தனர்.

அங்குள்ள தயுவான் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் சிக்கிக்கொண்டனர். பல வீடுகள் சேதமடைந்ததாக மாவட்ட அவசரகால மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us