sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விபத்தில் இறக்கும் ஓட்டுநர்களுக்கு நிவாரணம் கேட்டு மனு

/

விபத்தில் இறக்கும் ஓட்டுநர்களுக்கு நிவாரணம் கேட்டு மனு

விபத்தில் இறக்கும் ஓட்டுநர்களுக்கு நிவாரணம் கேட்டு மனு

விபத்தில் இறக்கும் ஓட்டுநர்களுக்கு நிவாரணம் கேட்டு மனு


ADDED : செப் 12, 2025 12:23 AM

Google News

ADDED : செப் 12, 2025 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'பணியின்போது, விபத்தில் இறக்கும் ஓட்டுநர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும்' என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

சென்னை அடையாரில், அமைச்சர் கணேசனை, உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்க பொதுச்செயலர் ஜாஹிர் உசேன், துணைப் பொதுச் செயலர் அஸ்லாம் கான் மற்றும் நிர்வாகிகள் பலர் நேற்று சந்தித்து பேசினர்.

இது குறித்து, ஜாஹிர் உசேன் அளித்த பேட்டி:

அமைப்பு சாரா ஓட்டுநர் நல வாரியத்தில் வழங்கக்கூடிய பணப் பலன்களை, மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்.

கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் இருப்பது போல், பணியின்போது மரணம் அடையும் ஓட்டுநர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கி ய மனு அளித்தோம்.

அவற்றை பரிசீலித்து, முக்கியமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என, அமைச்சர் உறுதி அளித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us