sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 மீனாட்சி கோவில் அறங்காவலர்கள் பதவி 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: தினமலர் செய்தி எதிரொலி

/

 மீனாட்சி கோவில் அறங்காவலர்கள் பதவி 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: தினமலர் செய்தி எதிரொலி

 மீனாட்சி கோவில் அறங்காவலர்கள் பதவி 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: தினமலர் செய்தி எதிரொலி

 மீனாட்சி கோவில் அறங்காவலர்கள் பதவி 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: தினமலர் செய்தி எதிரொலி


ADDED : ஜன 01, 2026 01:45 AM

Google News

ADDED : ஜன 01, 2026 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் பதவி காலாவதியாகி ஒரு மாதம் ஆன நிலையில், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, இரண்டு ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் அறங்காவலர்களாக இரண்டு ஆண்டுகளுக்கு முன், அமைச்சர் தியாகராஜனின் தாய் ருக்மணி, தொழிலதிபர் பி.கே.எம்.செல்லையா, வழக்கறிஞர் அன்புநிதியின் மனைவி மீனா, டாக்டர் சீனிவாசன், சுப்புலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதில், தலைவராக ருக்மணி தேர்வு செய்யப்பட்டார். தற்போது கோவிலில் திருப்பணிகள் நடந்து வரும் நிலையில், பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதற்கேற்ப பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நிர்வாக ரீதியாக அனுமதி பெற அறங்காவலர்கள் ஒப்புதல் அவசியம்.

ஆனால், அவர்களின் பதவிக்காலம் கடந்த நவ., 30ல் முடிந்தது. அவர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படாததாலும், புதியவர்கள் நியமிக்கப்படாததாலும் திருப்பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவானது.

இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, அறங்காவலர்களாக இருந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us