sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குஜராத்துக்கு ரூ.81; தமிழகத்துக்கு ரூ.88.50- பருப்பு கொள்முதலில் ரூ.45 கோடி இழப்பு

/

குஜராத்துக்கு ரூ.81; தமிழகத்துக்கு ரூ.88.50- பருப்பு கொள்முதலில் ரூ.45 கோடி இழப்பு

குஜராத்துக்கு ரூ.81; தமிழகத்துக்கு ரூ.88.50- பருப்பு கொள்முதலில் ரூ.45 கோடி இழப்பு

குஜராத்துக்கு ரூ.81; தமிழகத்துக்கு ரூ.88.50- பருப்பு கொள்முதலில் ரூ.45 கோடி இழப்பு

28


ADDED : செப் 12, 2025 06:36 AM

Google News

28

ADDED : செப் 12, 2025 06:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் ரேஷன் துவரம் பருப்பு கொள்முதல் டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களுடன், உணவு துறை அதிகாரிகள் விலை குறைப்பு பேச்சு நடத்தினர். இதில், கிலோ பருப்புக்கு, 90 ரூபாய் விலை குறிப்பிட்ட நிறுவனங்கள், 88.50 ரூபாய்க்கு வழங்குவதாக தெரிவித்தன.

அதேசமயம், அதே நிறுவனங்கள், குஜராத் அரசுக்கு கிலோ, 81 ரூபாய்க்கு பருப்பு வழங்குகின்றனர். தமிழகத்தில் கூடுதல் விலை கேட்பதால், தமிழக அரசுக்கு, 45 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக, 60,000 டன் துவரம் பருப்பு வாங்க, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், 'டெண்டர்' கோரியுள்ளது. இதில், இறக்குமதி செய்யப்படும் பருப்புக்கு குறைந்த விலை புள்ளியாக சில நிறுவனங்கள், கிலோவுக்கு, 90 ரூபாய் விலை புள்ளி வழங்கியிருந்தன.

முயற்சிகள் அந்த பருப்பின் வெளிச்சந்தை விலை, 75 ரூபாயாக தான் உள்ளது. நிறுவனங்களின் ஆதாயத்திற்காகவும், அதிகாரிகளின் கமிஷனுக்காகவும், அவை கோரிய விலைக்கு பருப்பு வாங்க முயற்சிகள் நடந்தன.

இது தொடர்பாக செய்தி வெளியானதால், பருப்பு வாங்குவதற்கான ஆணை நிறுத்தப்பட்டு, விலை குறைப்பு பேச்சு நடத்தப்பட்டது. இதற்கிடையே, வாணிப கழக டெண்டரில், கிலோ பருப்புக்கு, 90 ரூபாய் விலை கேட்ட நிறுவனங்கள், அதே இறக்குமதி பருப்பை, குஜராத் மாநில உணவு துறைக்கு கிலோ, 81 ரூபாய்க்கு வழங்க, 'ஆர்டர்' பெற்றுள்ளன.

இந்நிலையில், அந்நிறுவனங்களுடன் விலை குறைப்பு தொடர்பாக, தமிழக உணவுத் துறை உயரதிகாரிகளும், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளும் நேற்று மீண்டும் பேச்சு நடத்தினர்.அதில், 90 ரூபாய்க்கு விலை புள்ளி வழங்கிய நிறுவனங்கள், கிலோவுக்கு, 1.50 ரூபாய் மட்டும் குறைத்து, 88.50 ரூபாய்க்கு வழங்குவதாக தெரிவித்தன.

அந்நிறுவனங்களிடம், 'குஜராத்தில் கிலோ, 81 ரூபாய்க்கு இதே பருப்பை வழங்குவது ஏன்' என, அதிகாரிகள் கேட்டனர். அதற்கு நிறுவனங்களின் சார்பில், 'தமிழகத்தில் செலவு அதிகம்' என்றனர். 'என்ன செலவு' என்று அதிகாரிகள் கேட்டதற்கு, எந்தவித பதிலும் அளிக்கவில்லை. அந்த பணம் எங்கே செல்கிறது?

அரசுக்கு இழப்பு ஒரே பருப்புக்கு குஜராத்தில் கிலோ, 81 ரூபாய்க்கு வழங்குவதாக ஆர்டர் எடுத்துள்ள நிறுவனங்கள், அதே பருப்பை தமிழகத்தில், 88.50 ரூபாய்க்கு வழங்கினால், தமிழக அரசுக்கு கிலோவுக்கு, 7.50 ரூபாய் என, 60,000 டன்னுக்கு, 45 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்படும். எனவே, தொடர்ந்து விலை குறைப்பு பேச்சு நடத்தி, கிலோ பருப்பை, 81 ரூாய்க்கு வாங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us