sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதல்வருக்கு வேலைப்பளு; இபிஎஸ் உடன் விவாதிக்க முடியாது: சொல்கிறார் கனிமொழி

/

முதல்வருக்கு வேலைப்பளு; இபிஎஸ் உடன் விவாதிக்க முடியாது: சொல்கிறார் கனிமொழி

முதல்வருக்கு வேலைப்பளு; இபிஎஸ் உடன் விவாதிக்க முடியாது: சொல்கிறார் கனிமொழி

முதல்வருக்கு வேலைப்பளு; இபிஎஸ் உடன் விவாதிக்க முடியாது: சொல்கிறார் கனிமொழி

66


UPDATED : டிச 27, 2025 05:38 PM

ADDED : டிச 27, 2025 05:33 PM

Google News

66

UPDATED : டிச 27, 2025 05:38 PM ADDED : டிச 27, 2025 05:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: முதல்வருக்கு வேலைப்பளு அதிகம், எனவே இபிஎஸ்சுடன் விவாதித்துக் கொண்டு இருக்க முடியாது என்று திமுக எம்பி கனிமொழி கூறி உள்ளார்.

கீழடியில் அவர் அளித்த பேட்டி;

கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதித்திட்டம். பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த திட்டம் உறுதி செய்யப்படவில்லை. 40 நாள் வேலைத்திட்டம் என்பதே அதிகபட்சமாக இருந்தது.

இந்த திட்டத்தில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம் என்ற மாநில அரசின் உரிமை கூட பறிக்கப்பட்டு உள்ளது. முழு ஊதியத்தையும் மத்திய அரசு தான் வழங்கிக் கொண்டு இருக்கும் நிலையில், அதையும் 60-40 சதவீதம் என்ற அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இந்த திட்டத்தையே முடித்து விடுவதற்காக தடுத்து விடுவதற்காக செய்யப்பட்ட மாற்றங்களாக பார்க்கிறோம்.

கிராமப்புறங்களில் உள்ள மக்களின் பொருளதாரத்தை பாதிக்கக்கூடிய ஒரு சூழலை நாடு முழுவதுமே உருவாக்கிவிடும். அரசு திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் யார் என்று நமக்கு நல்லாவே தெரியும். உலகம் முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டி பெருமை பெற்றவர் தான் இபிஎஸ்.

முதல்வருக்கு இருக்கக்கூடிய வேலைப்பளுவில் இவரோடு (இபிஎஸ்சை குறிப்பிடுகிறார்) எல்லாம் விவாதித்துக் கொண்டு இருக்க முடியாது. கட்சியிலே எத்தனையோ பேர் இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அவருடன் (இபிஎஸ்சுடன்) விவாதிக்க தயாராக இருப்பார்கள். அவர்களோடு விவாதிக்கட்டும். அதையும் தாண்டி சில கேள்விகள் இருந்தால் முதல்வர் நிச்சயமாக பதில் அளிப்பார்.

இவ்வாறு கனிமொழி பேட்டி அளித்தார்.






      Dinamalar
      Follow us