sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செந்தில் பாலாஜி மனு விசாரணை தள்ளிவைப்பு

/

செந்தில் பாலாஜி மனு விசாரணை தள்ளிவைப்பு

செந்தில் பாலாஜி மனு விசாரணை தள்ளிவைப்பு

செந்தில் பாலாஜி மனு விசாரணை தள்ளிவைப்பு


ADDED : மார் 06, 2024 11:29 PM

Google News

ADDED : மார் 06, 2024 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,- சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும், 11க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை துவக்கக்கூடாது; தள்ளி வைக்க வேண்டும் என, செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்த மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து, குற்றச்சாட்டு பதிவுக்காக, பிப்., 16ல் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தன்னை அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன், விசாரணையில் உள்ளது. இந்த மனுவுக்கு, 'சட்டப்படி விசாரணை நடத்தி தான், மனுதாரருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது; பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை' என, அமலாக்கத்துறை பதிலளித்தது.

இந்த வழக்கு, நேற்று நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் மா.கவுதமன் ஆஜராகி, ''இந்த மனு மீது மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்,'' என்றார். அதை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை, வரும் 11க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

பின், புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 24வது முறையாக மார்ச் 11 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us