ADDED : டிச 29, 2025 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் இறந்தார்.
வந்தவாசி வெண்மந்தை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் மணி, 22; இவர் நேற்று முன்தினம் இரவு திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் - புதுச்சேரி பைபாசில் ஆண்டியார்பாளையம் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மணி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
தகவலறிந்த கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

