ADDED : செப் 20, 2025 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : டீ கடைக்காரர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த பிடாகம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து மகன் தெய்வசிகாமணி, 35; டீக்கடை நடத்தி வந்தார். திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த, 12ம் தேதி சொந்த வேலை காரணமாக காரில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.