/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனைவியை கொன்று கணவர் தற்கொலை? செஞ்சி அருகே பரபரப்பு
/
மனைவியை கொன்று கணவர் தற்கொலை? செஞ்சி அருகே பரபரப்பு
மனைவியை கொன்று கணவர் தற்கொலை? செஞ்சி அருகே பரபரப்பு
மனைவியை கொன்று கணவர் தற்கொலை? செஞ்சி அருகே பரபரப்பு
ADDED : செப் 11, 2025 03:17 AM

செஞ்சி: மனைவி ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த நிலையில், கணவர் துாக்கில் தொங்கியதால், மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள பசுமலைதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் நமச்சிவாயம், 60; இவரது மனைவி பத்மாவதி, 50; இவர், செஞ்சி உருது உயர்நிலை பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு பாண்டுரங்கன், 33; பாண்டியராஜன், 31 ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இதில், பாண்டுரங்கனுக்கு திருமணமாகி கலைவாணி என்ற மனைவி உள்ளார்.
நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் நமச்சிவாயம், பத்மாவதி இருவரும் மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு, மாடுகளுக்கு தண்ணீர் காட்டவும், வைக்கோல் போடவும் சென்றனர்.அங்கு, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பத்மாவதியின் மருமகள் கலைவாணியிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து கலைவாணி, தனது கணவர் பாண்டுரங்கனுக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து, இரவு 7:00 மணிக்கு பாண்டுரங்கனும், கலைவாணியும் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு, நிலத்தின் அருகே இருந்த மலை ஓடையில் பத்மாவதி கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அதன் அருகே வேப்ப மரத்தில் நமச்சிவாயம் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து பாண்டுரங்கன் கொடுத்த தகவலின் பேரில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். பின்னர், இருவரின் உடல்களையும் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.தகராறில் நமச்சிவாயம், மனைவியை கொலை செய்துவிட்டு தானும் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். சந்தேக மரணம் என வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.