/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தாய் திட்டியதால் மகள் தற்கொலை
/
தாய் திட்டியதால் மகள் தற்கொலை
ADDED : டிச 29, 2025 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரவாண்டி அடுத்த கீழக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் மகள் சுபஸ்ரீ, 17; இவர், சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக வீட்டில் இருந்தார். நேற்று காலை சுபஸ்ரீயை துணி துவைக்கவும், , சமைக்கவும் அவரது தாய் கூறியுள்ளார்.
இதில் மனமடைந்த சுபஸ்ரீ புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுரேஷ் அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

