sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மருத்துவமனையில் 3 சவரன் 'அபேஸ்'

/

மருத்துவமனையில் 3 சவரன் 'அபேஸ்'

மருத்துவமனையில் 3 சவரன் 'அபேஸ்'

மருத்துவமனையில் 3 சவரன் 'அபேஸ்'


ADDED : செப் 09, 2025 11:46 PM

Google News

ADDED : செப் 09, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி; விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 3 சவரன் 'அபேஸ்' செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் அருகே, காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 48; விவசாயி. இவரது மாமியார் இந்திராணி, 72; உடல் நலக்குறைவு காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 2ம் தேதி அவருக்கு ஸ்கேன் எடுக்க கூறியதால் மாரிமுத்து இந்திராணியின் தாலி, செயின், கம்மல் அடங்கிய, 3 சவரன் நகைகளை அவிழ்த்து, பையில் வைத்து அதை ஸ்கேன் அறை எதிரில் அமர்ந்திருந்த நபர் ஒருவரிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றார்.

திரும்பி வந்து பார்த்த போது அந்த நபரை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us