ADDED : டிச 25, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: மடத்துக்குளம் நால் ரோட்டில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர் மாவட்ட எல்லையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. இந்த ரோடு வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
மேலும் மடத்துக்குளம் நால்ரோட்டில் கணியூர் ரோடு, குமரலிங்கம் ரோடும், உடுமலை ரோடும், பழநி ரோடும் சந்திக்கின்றன. இதனால் அங்கு போக்குவரத்து அதிகளவில் உள்ளது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மடத்துக்குளம் நால்ரோட்டில் ரவுண்டானா அமைக்க, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

