/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாடு வளர்ப்பு உதவியாளர் பணிக்கு பயிற்சி முகாம்
/
மாடு வளர்ப்பு உதவியாளர் பணிக்கு பயிற்சி முகாம்
ADDED : டிச 28, 2025 06:58 AM
திருப்பூர்: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில், கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது.
இங்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், 'வெற்றி நிச்சயம்' திட்டத்தில், ஜன. 28ம் தேதி துவங்கி, ஒரு மாத காலத்துக்கு, 'மாடு வளர்ப்பு உதவியாளர்' பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி, மொத்தம், 200 மணி நேரம் வழங்கப்பட இருக்கிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல், 35 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.பயனாளிகளுக்கு, 6,000 ரூபாய் ஊக்கத்தொகை, அரசின் சார்பில், அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள், 0421 2248524, 94435 51869 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

