sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!

/

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!


ADDED : செப் 20, 2025 11:49 PM

Google News

ADDED : செப் 20, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புரட்டாசி மாத

முதல் சனிக்கிழமையான

நேற்று திருப்பூர் வட்டார கோவில்களில், சிறப்பு

அலங்காரத்தில்

பக்தர்களுக்கு

அருள்பாலித்த பெருமாளின் அருட்கோலங்கள்.

திருப்பூர், செப். 21--

புரட்டாசி மாத சனிக்கிழமையான நேற்று, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம், சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதம் இருந்து, பெருமாளை வணங்குவது வழக்கம். புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, பெருமாள் கோவில்களில், புரட்டாசி வழிபாடு கோலாகலமாக நடந்தது.

திருப்பூர் ஸ்ரீவீரராகப்பெருமாள் கோவிலில், அதிகாலை, 5:30 மணிக்கு, ஸ்ரீவீரராகவர், பாண்டியன் கொண்டை கிரீட அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எழுந்தருளினார். திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மாலை வரை, கொடிமரம் அருகே வீற்றிருந்து அருள்பாலித்தார். பக்தர்களுக்கு, துளசி, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, துளசி மாலை மற்றும் நெல்லிக்கனி படைத்து, பெருமாளை வழிபட்டனர். திருப்பூர் பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், காலை மற்றும் மாலை வேளையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தாசர்களிடம் ஆசி கோவில் வாசலில், பெருமாள் தாசர்கள் சங்கு, சேகண்டி ஒலி எழுப்பியபடி, பூஜை செய்தனர். பக்தர்கள், அரிசி, பருப்பு, காய்கறிகளை, தலைவாழை இலையில் சமர்ப்பித்தனர்; சங்குநாதம் எழுப்பியபடி, தாசர்கள் ஆசி வழங்கினர். மேலும், அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை சேகண்டி தட்டில் வைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

பெருமாள் கோவில்களில்பக்தர்கள் வெள்ளம் தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், மொண்டிபாளையம் ஸ்ரீவெங்கடேசபெருமாள் கோவில், கருவலுார் கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள் கோவில்கள், அவிநாசி காரணப்பெருமாள் கோவில், அனுப்பர்பாளையம் அரங்கநாத பெருமாள் கோவில்; ஆண்டிபாளையம் குளக்கரையில், வேணுகோபாலசுவாமி, வரதராஜர் பெருமாள் கோவில், வேலம்பட்டி வரதராஜ பெருமாள்கோவில்.

பெருந்தொழுவு பெருமாள் கோவில், மங்கலம் மற்றும் பெருமாநல்லுார் ஆதிகேசவ பெருமாள் கோவில்கள், கணக்கம்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில்.

கோவில்வழி பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவில், வேட்டுவபாளையம் - அக்ரஹாரப்புத்துார் காரணப்பெருமாள் கோவில், சாமளாபுரம் ஸ்ரீவரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும், சுவாமி புறப்பாடு, அன்னதானம், தாசர்களின் மயார்பூஜை வழிபாடுகள் நடந்தது.

புரட்டாசி சனிக்கிழமை விரதம் மேற்கொண்ட பக்தர்கள், அதிகாலையில் இருந்து விரதம் இருந்து, கோவில்களில் பெருமாளை தரிசனம் செய்தனர். கோவில்களில் வழங்கப்பட்ட அன்ன பிரசாதத்தை உண்டு, கோவில் வளாகத்திலேயே விரதத்தை பூர்த்தி செய்தனர்.






      Dinamalar
      Follow us