sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கைதானவர்கள் விடுவிப்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

/

 கைதானவர்கள் விடுவிப்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

 கைதானவர்கள் விடுவிப்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

 கைதானவர்கள் விடுவிப்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை


ADDED : டிச 25, 2025 05:51 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் பொன்னுசாமி, கலெக்டர் மனிஷ் நாரணவரேயிடம் அளித்த மனு:

திருப்பூர் மாநகராட்சி குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சின்னக்காளிபாளையம் கிராமத்தில், விவசாயிகளும், பொதுமக்களும், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தினர்.

மாநகராட்சிக்கு தானமாக கொடுத்த, தர்ம தாயம் வகையை சேர்ந்த நிலத்தில், தர்ம சத்திரம் அமைத்து, அறம் சார்ந்த செயல்கள்தான் செய்யவேண்டும். அந்நிலத்தில், மாநகராட்சி குப்பைகளை கொட்டும்போது ஏற்பட்ட பிரச்னையில், விவசாயிகள், பொதுமக்களை, போலீசார் கைது செய்தனர். அவர்கள் தற்போது சேலம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால், இடுவாய் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அசாதாரண சூழலில் உள்ளனர்.

இது விஷயத்தில், கலெக்டர் நேரடியாக தலையிட்டு, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும். சின்னக்காளிபாளையத்தில் தர்ம தாயமாக பெறப்பட்ட நிலத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us