ADDED : டிச 28, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் நகராட்சி தலைவர் பத்மாவதி தலைமையில், கமிஷனர் முத்துலட்சுமி முன்னிலையில் நடந்த விழாவில் தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் ஆறுச்சாமி
அடையாள அட்டை வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சுகாதார ஆய்வாளர் விவேக் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தூய்மை பணியாளர்களின் கோரிக்கை மற்றும் அவர்கள் தேவைகளை அரசுக்கு எடுத்துரைக்கும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களோடு தூய்மை பணியினை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

