ADDED : டிச 24, 2025 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி ஜே.கே.காலனியைச் சேர்ந்தவர் முரளி 40. இவரது மனைவி சண்முகபிரியா 28. இவர்களுக்கு இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது.
இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மதுபோதையில் முரளி, அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த சண்முகப்பிரியாவை, அவதூறாக பேசி குத்துவிளக்கினால் அடித்து தாக்கினார். பெரியகுளம் அரசுமருத்துவமனையில் சண்முகபிரியா அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் முரளியை கைது செய்தனர்.

