sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்

/

போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்

போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்

போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்


ADDED : டிச 23, 2025 08:13 AM

Google News

ADDED : டிச 23, 2025 08:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: காதல் திருமணம் செய்த ஜோடி, பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சமடைந்தனர்.

ஆத்துார், அம்பேத்கர் நகரை சேர்ந்த வேல்முருகன் மகள் திவ்யா, 19. இவர், பெரம்பலுார் தனியார் கல்லுாரியில், பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பூபதி மகன் விக்ரம், 22, பட்டப்படிப்பு முடித்த இவர், பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள், இரண்டு ஆண்டுகளாக காத-லித்து

வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் அறிந்த இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 18ல், வீட்டை விட்டு வெளியே-றிய இவர்கள், புத்துார் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று, பாதுகாப்பு கேட்டு மாணவி திவ்யா, விக்ரம் ஆகியோர் தலைவாசல் போலீசில் தஞ்சமடைந்தனர்.

இருவீட்டு பெற்றோரையும் வரவழைத்து, போலீசார் பேச்சு-வார்த்தை நடத்தினர். மாணவியின் பெற்றோர், திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. திருமணம் செய்த விக்ரமுடன், மாணவி திவ்யாவை அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us