/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை முதல் வரும் 22 வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
நாளை முதல் வரும் 22 வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
நாளை முதல் வரும் 22 வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
நாளை முதல் வரும் 22 வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : டிச 18, 2025 04:51 AM
சேலம்: மார்கழி அமாவாசை, வார இறுதி நாட்களை முன்னிட்டு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில், நாளை முதல், வரும், 22 வரை, 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஊத்தங்கரை, அருர், மேட்டூர்; சேலத்தில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஓசூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பதி; பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோடு, காஞ்சிபுரத்துக்கு பஸ்கள் இயக்கப்படும்.
ஓசூரில் இருந்து சேலம், சென்னை, புதுச்சேரி, கடலுார், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர்; நாமக்கல்லில் இருந்து ஆத்துார், செந்தாரப்பட்டி; ராசிபுரத்தில் இருந்து சென்னை; திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு; ஈரோட்டில் இருந்து பெங்களூரு; திருச்சியில் இருந்து ஓசூருக்கு பஸ்கள் இயக்கப்படும்.சேலம், தர்மபுரி பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து மேச்சேரி, மேட்டூர், மாதேஸ்வரன்மலைக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை, சித்தர் கோவில் பகுதிகளுக்கும், கூட்டத்துக்கு ஏற்ப, கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

