/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் பாலிதீன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிப்பு மண் வளத்திற்கு ஆபத்து ! அதிகாரிகளே புத்தாண்டிலாவது முழுமையாக ஒழிக்க வேண்டும்
/
ராமநாதபுரத்தில் பாலிதீன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிப்பு மண் வளத்திற்கு ஆபத்து ! அதிகாரிகளே புத்தாண்டிலாவது முழுமையாக ஒழிக்க வேண்டும்
ராமநாதபுரத்தில் பாலிதீன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிப்பு மண் வளத்திற்கு ஆபத்து ! அதிகாரிகளே புத்தாண்டிலாவது முழுமையாக ஒழிக்க வேண்டும்
ராமநாதபுரத்தில் பாலிதீன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிப்பு மண் வளத்திற்கு ஆபத்து ! அதிகாரிகளே புத்தாண்டிலாவது முழுமையாக ஒழிக்க வேண்டும்
ADDED : ஜன 01, 2026 05:26 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பாலிதீன் பைகள், கப், கவர்கள் தாராளமாக புழக்கத்தில் உள்ளன. மண் வளத்திற்கு கேடு விளைவிக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த மாவட்டநிர்வாகம் முன்வர வேண்டும். பொதுமக்கள் அவர்களாகவே மஞ்சள் பையை பயன்படுத்த முன்வர வேண்டும்.
சுற்றுச்சூழல், நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதற்கு பதிலாக மஞ்சள் பை, சணல் பைகளை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கேரி போக்குகள், கப், கவர்கள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. சிறு ஓட்டல்கள், கடைகள், மார்க்கெட், பஜார், இறைச்சி கடை ஆகிய இடங்களில் பாலிதீன் பைகளை தாராளமாக பயன்படுத்துகின்றனர்.
* பெயரளவில் நடவடிக்கை:
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், மெழுகு இலையில் சாம்பார் முதல் பிரியாணி வரை சூடான உணவுகளை விற்கின்றனர். இவ்விஷயத்தில் உணவு பாதுகாப்புதுறையினர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களின் நடவடிக்கை பெயரளவில் மட்டுமே உள்ளது. குப்பை கொட்டும் இடங்கள், தொட்டிகளில் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்துள்ளன.
சில ஊராட்சிகளில் குப்பையை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் நீர்நிலைகள், ஓடை வாய்க்கால்களில் பிளாஸ்டிக் குப்பை குவிந்துள்ளது. அவற்றை அகற்ற வேண்டும். மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும். இன்று பிறக்கும் ஆங்கிலப் புத்தாண்டிலாவது பாலிதீன், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக கைவிட்டு, மண் வளம், நிலத்திற்கு கேடு விளைக்கும் பாலிதீன் பைகளுக்கு பதிலாக பொதுமக்கள் தானாக முன்வந்து அனைவரும் மஞ்சள் துணி, சணல் பைக்கு மாறினால் மட்டுமே பாலிதீன் பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.--

