/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானையில் மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி: 33 பேர் ஆப்சென்ட்
/
திருவாடானையில் மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி: 33 பேர் ஆப்சென்ட்
திருவாடானையில் மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி: 33 பேர் ஆப்சென்ட்
திருவாடானையில் மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி: 33 பேர் ஆப்சென்ட்
ADDED : ஏப் 17, 2024 06:28 AM
திருவாடானை, : திருவாடானையில் மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்தது. 33 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
லோக்சபா தேர்தலில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாள்வது மற்றும் ஓட்டுப்பதிவு நடைமுறைகள் குறித்தான பயிற்சி வகுப்பு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
ஓட்டுச்சாவடி அலுவலர் நிலை 1, நிலை 2, நிலை 3 ஆகிய பணிகளில் பெரும்பாலும் ஆசிரியர்களே நியமிக்கபட்டுள்ளனர்.
ஓட்டுச்சாவடி மையங்களில் பணியாற்றுபவர்களுக்கு முதல் கட்ட பயிற்சி சின்னக்கீரமங்கலம் தனியார் பள்ளியில் மார்ச் 24, இரண்டாம் கட்ட பயிற்சி ஏப்.8ல் திருவாடானை அரசு கலைக்கல்லுாரியிலும் நடந்தது.
இங்கு மூன்றாம் கட்ட பயிற்சி நேற்று முன்தினம் நடந்தது.
இதில் 1654 பேர் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்கபட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் 33 பேர் ஆப்சென்ட் ஆகினர். இது குறித்து உதவி தேர்தல் அலுவலர் மாரிச்செல்வி கூறுகையில், அடுத்த கட்டமாக நாளை (ஏப்.18) காலை பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கபடும்.
உடல் நலக்குறைவு, குடும்ப சூழல், தவிர்க்க முடியாத காரணத்தால் பலரால் உரிய நேரத்தில் பணிக்கு வர முடியாத நிலை உள்ளது.
அதனால் 20 சதவீதம் ஊழியர்கள் ரிசர்வ் அடிப்படையில் இருப்பர். அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கபடும் என்றார்.

