/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு
/
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு
ADDED : டிச 23, 2025 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி பகுதியில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு, மாவட்ட கலெக்டர் அலு-வலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லிபா-ளையத்தில், ஜல்லிக்கட்டு விழா, வரும், 2026 பிப்., 14ல் நடத்த ஊர் பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்து வருகிறோம். அதில், அரசு விதித்துள்ள அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்றி, ஜல்-லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே, எங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

