/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் கூட்டுறவு பணியாளர் நாள் நிகழ்ச்சி
/
நாமக்கல்லில் கூட்டுறவு பணியாளர் நாள் நிகழ்ச்சி
ADDED : செப் 14, 2025 04:43 AM
நாமக்கல்:தமிழக முதல்வர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் உத்தரவுப்-படி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, மண்டல அளவில் கூட்டு-றவுத்துறை பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பணியாளர் நாள் நிகழ்ச்சி, மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. மண்டல இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்து, கூட்டு-றவுத்துறையில் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் பணியா-ளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க பணியாளர்களிடம், கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்ட-றிந்தர்.தொடர்ந்து, கூட்டுறவு சங்க பணியாளர்களின் கோரிக்கை மனுக்கள் உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்-டது. 'மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இரண்டு மாதஙகளில் தீர்வு செய்யப்படும்' என, இணைப்பதிவாளர் கூறினார். நாமக்கல் சரக துணைப்பதிவாளர் ஜேசுதாஸ், பணியாளர் அலுவலர் செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.