ADDED : டிச 23, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் உள்ள காஞ்சி காமகோடி மடத்தின் கிளையில் மார்கழி மாதத்தை முன்னிட்டு தினமும் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதையொட்டி திருவேடகம் விவேகானந்தா கல்லுாரி மாணவர்களின் நாமசங்கீர்த்தனம் நடந்தது. பரமானந்த மகராஜ் தலைமை வகித்தார்.
பேராசிரியர் ஜெயக்குமார் ஒருங்கிணைத்தார். ஏற்பாடுகளை நிர்வாகி ஸ்ரீகுமார், வெங்கட்ராமன், வீரமணிகண்டன், ராதா வெங்கட்ராமன் செய்திருந்தனர். இந்த மடத்தில் பசுமாடுகளை பராமரிக்கும் கோசாலையும், மாலை நேரத்தில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வியும் வழங்கப்படுகிறது.

