/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உலகத்தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு
/
உலகத்தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு
ADDED : செப் 12, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடந்தது.சங்கஆய்வறிஞர் சோமசுந்தரி ஒருங்கிணைத்தார்.
திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லுாரி துறைத்தலைவர் முனியாண்டி முன்னிலை வகித்தார். தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் ராஜா கோவிந்தசாமி 'பாரதியின் ஆங்கிலப்புலமை ' எனும் தலைப்பில் பேசுகையில், 'பாரதியின் நெஞ்சுரம் அவரது ஆங்கிலப்படைப்புகளிலும் வெளிப்பட்டது.
பாரதியின் 'பொன்வால் நரி' என்ற ஆங்கிலச் சிறுகதை சிறப்பானது' என்றார்.
சங்க உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்லுாரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.