sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசு மருத்துவமனைகளில் முக அடையாள வருகைப்பதிவு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

/

அரசு மருத்துவமனைகளில் முக அடையாள வருகைப்பதிவு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

அரசு மருத்துவமனைகளில் முக அடையாள வருகைப்பதிவு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

அரசு மருத்துவமனைகளில் முக அடையாள வருகைப்பதிவு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


ADDED : செப் 11, 2025 05:15 AM

Google News

ADDED : செப் 11, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : அரசு மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவமனைகளில் முக அடையாள பயோமெட்ரிக் வருகைப் பதிவை நடைமுறைப்படுத்த தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.மதுரை வழக்கறிஞர் மலைராஜா தாக்கல் செய்த பொதுநல மனு:

அரசு மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவமனைகளில் டாக்டர்கள், அலுவலர்களின் வருகையை உறுதி செய்ய கைரேகையை பதிவு செய்யும் (பயோமெட்ரிக்) நடைமுறை உள்ளது. அதில் தொழில்நுட்ப ரீதியான குறைபாடால் வருகைப் பதிவு செய்வது சராசரியாக 34 சதவீதம் மட்டுமே உள்ளது.

வருகைப் பதிவு அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும் என ஏற்கனவே ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆதாருடன் இணைந்த முக அடையாள பயோமெட்ரிக் வருகைப் பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என தேசிய மருத்துவக் கவுன்சில் 2025 ஏப்ரலில் சுற்றறிக்கை அனுப்பியது. அதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தவில்லை. இங்கு ஆதாருடன் இணைந்த முக அடையாள பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்தி சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஜஸ்வந்த் ஆஜரானார்.

நீதிபதிகள் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர், மருத்துவக் கல்வி இயக்குனரக இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அக்.13 க்கு ஒத்திவைத்தனர்.






      Dinamalar
      Follow us